ஆன்மிகம்
நெல்லை டவுனில் பெருமாள் கோவில்களில் கருடசேவை
நெல்லை டவுன் உள்ள 5 பெருமாள் கோவில்களில் பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபெருமாள், லட்சுமி நரசிங்கப்பெருமாள் கரியமாணிக்கப் பெருமாள், திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள், கீழதிருவேங்கடநாதபுரம் வரதராஜ பெருமாள் ஆகிய 5 பெருமாள் கோவில்களில் நேற்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனமும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.
மாலை 6 மணிக்கு 5 பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் டவுன் நான்கு ரத வீதிகளிலும் கருடசேவை வீதிஉலா நடந்தது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு 5 பெருமாள்களும் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் டவுன் நான்கு ரத வீதிகளிலும் கருடசேவை வீதிஉலா நடந்தது. இரவு 9 மணிக்கு தேரடி திடலில் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.