ஆன்மிகம்
காமாட்சி அம்மனின் மூன்று வடிவங்கள்
அன்னை காமாட்சியே ஸ்ரீசக்கரமாகவும் விளங்குகிறாள். வட்ட வடிவமான தொட்டி போன்று, இந்த ஸ்ரீசக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் என்றவுடன் பக்தர்கள் பலரின் நினைவுக்கு வருவது அங்கு அருளாட்சி செய்யும், காமாட்சி அம்மனின் நினைவுதான். ‘காமாட்சி’ என்பதற்கு ‘அன்பும் கருணையும் நிறைந்த கண்களைக் கொண்டவள்’ என்று பொருள் ஆகும். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த காமாட்சி அம்மனே அம்பாளாக விளங்குகிறாள். அதன் காரணமாகத்தான், காஞ்சிபுரத்தில் உள்ள எந்த சிவாலயங்களிலும் அம்பாளுக்கு என்று தனி சன்னிதி காணப்படுவதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்தி மட்டுமே அனைத்து சிவாலயங்களிலும் காணப்படும்.
காமாட்சி அம்மன் கோவிலில், முதல் பிரகாரத்தின் மையப்பகுதியில் காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம், 24 கல் தூண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தின் நடுவில்தான் காமாட்சி அம்மன் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். தென் கிழக்காக வீற்றிருக்கும் காமாட்சி அம்மன், நான்கு கரங்களுடன் பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அன்னையின் கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு (புஷ்ப பாணம்), கரும்பு வில் முதலியவை காணப்படுகின்றன.
தட்சன் நடத்திய யாகத்தின் போது, அந்த யாக குண்டத்தில் விழுந்து உயிர்நீத்தாள், தாட்சாயிணி. அவளது உடல் பாகங்கள் பாரத தேசம் முழுவதும் 51 இடங்களில் விழுந்ததாகவும், அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும், 51 சக்தி பீடங்களாக உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சக்தி பீடங்களில் ‘காமகோடி பீடம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் திருத்தலம் முக்கியமானதாக போற்றப்படுகிறது. இங்கு காமாட்சி அம்மன், கலைமகளான சரஸ்வதியையும், திருமகளான லட்சுமியையும் தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டிருக்கிறாள். இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் காமாட்சி அன்னையானவள், ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் இருந்து அருள்புரிகின்றாள்.
காமகோடி காமாட்சி - மூல விக்கிரகம் (ஸ்தூல வடிவம்)
அஞ்சன காமாட்சி - அரூப லட்சுமி (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் - ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)
காமகோடி காமாட்சி எனப்படும் மூலவர் அம்பாளின் இடது பக்கத்தில், வடதிசை நோக்கியவாறு அரூப லட்சுமியான ‘அஞ்சன காமாட்சி’ காட்சியளிக்கிறாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால், இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி அன்னையானவள், தவம் புரியும் கோலத்தில் காட்சி தருகின்றாள்.
அன்னை காமாட்சியின் காரண வடிவமாக திகழ்கிறது ஸ்ரீசக்கரம். இது மூலவர் காமாட்சி அம்மனின் எதிரில் காணப்படுகிறது. இதனால் இத்தலம் ‘ஸ்ரீசக்கர பீடத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அன்னை காமாட்சியே ஸ்ரீசக்கரமாகவும் விளங்குகிறாள். வட்ட வடிவமான தொட்டி போன்று, இந்த ஸ்ரீசக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சக்கரத்தை பூஜித்துதான் ஆதிசங்கரர், அன்னையின் அருளைப் பெற்றார் என்று தல வரலாறு சொல்கிறது.
காமாட்சி அம்மன் கோவிலில், முதல் பிரகாரத்தின் மையப்பகுதியில் காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம், 24 கல் தூண்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தின் நடுவில்தான் காமாட்சி அம்மன் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். தென் கிழக்காக வீற்றிருக்கும் காமாட்சி அம்மன், நான்கு கரங்களுடன் பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அன்னையின் கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு (புஷ்ப பாணம்), கரும்பு வில் முதலியவை காணப்படுகின்றன.
தட்சன் நடத்திய யாகத்தின் போது, அந்த யாக குண்டத்தில் விழுந்து உயிர்நீத்தாள், தாட்சாயிணி. அவளது உடல் பாகங்கள் பாரத தேசம் முழுவதும் 51 இடங்களில் விழுந்ததாகவும், அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும், 51 சக்தி பீடங்களாக உருவானதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சக்தி பீடங்களில் ‘காமகோடி பீடம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் திருத்தலம் முக்கியமானதாக போற்றப்படுகிறது. இங்கு காமாட்சி அம்மன், கலைமகளான சரஸ்வதியையும், திருமகளான லட்சுமியையும் தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டிருக்கிறாள். இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் காமாட்சி அன்னையானவள், ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் இருந்து அருள்புரிகின்றாள்.
காமகோடி காமாட்சி - மூல விக்கிரகம் (ஸ்தூல வடிவம்)
அஞ்சன காமாட்சி - அரூப லட்சுமி (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் - ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)
காமகோடி காமாட்சி எனப்படும் மூலவர் அம்பாளின் இடது பக்கத்தில், வடதிசை நோக்கியவாறு அரூப லட்சுமியான ‘அஞ்சன காமாட்சி’ காட்சியளிக்கிறாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால், இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி அன்னையானவள், தவம் புரியும் கோலத்தில் காட்சி தருகின்றாள்.
அன்னை காமாட்சியின் காரண வடிவமாக திகழ்கிறது ஸ்ரீசக்கரம். இது மூலவர் காமாட்சி அம்மனின் எதிரில் காணப்படுகிறது. இதனால் இத்தலம் ‘ஸ்ரீசக்கர பீடத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அன்னை காமாட்சியே ஸ்ரீசக்கரமாகவும் விளங்குகிறாள். வட்ட வடிவமான தொட்டி போன்று, இந்த ஸ்ரீசக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லட்சுமிகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த சக்கரத்தை பூஜித்துதான் ஆதிசங்கரர், அன்னையின் அருளைப் பெற்றார் என்று தல வரலாறு சொல்கிறது.