ஆன்மிகம்
சந்தனமாரியம்மன்

சந்தனமாரியம்மன் கோவில் வருஷாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2021-01-20 04:07 GMT   |   Update On 2021-01-20 04:07 GMT
பூதப்பாண்டி அருகே சாட்டுப்புதூர் சந்தனமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
பூதப்பாண்டி அருகே சாட்டுப்புதூர் சந்தனமாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

நாளை காலை 6 மணிக்கு மங்கள இசை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள், 108 சங்கு பூஜை, காலை 10 மணிக்கு தீபாராதனை, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், வருஷாபிஷேகம், மகா கும்ப அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு சிறுவர்களின் கலை நிகழ்ச்சி, அன்னதானம், இரவு 7.30 மணிக்கு பக்தி மெல்லிசை போன்றவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை தர்ம கர்த்தா இசக்கியாபிள்ளை என்கிற காளி தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News