ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் உள்திருவிழாவாக தொடங்கியது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க மூலம் பூசப்பட்ட கம்பத்தில் பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் காலை 9.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது. அதேசமயம் கோவிலுக்குள் சாமி புறப்பாடு நடக்கிறது.
மேலும் ஜி.எஸ்.டி. ரோடு வளாகத்துக்குள் அமைந்துள்ளன தெப்பத்தில் சாமி எழுந்தருள்வது தவிர்க்கப்பட்டு உள்ளது.