ஆன்மிகம்
அம்மன் குதிரை வாகனத்தில் புறப்பாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோபூஜை விழா

Published On 2021-01-16 08:19 IST   |   Update On 2021-01-16 08:19:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோ பூஜை விழா நடைபெற்றது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலிலிருந்து வன்னி மரத்திற்கு சென்றடைந்தார்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று கோபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கோ பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக பொங்கல் படையலிட்டு சர்க்கரைப்பொங்கல் மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டன. 

அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலிலிருந்து வன்னி மரத்திற்கு சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து தேரோடும் வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Similar News