ஆன்மிகம்
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருவிழா

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் திருவிழா தொடக்கம்

Published On 2021-01-15 07:50 GMT   |   Update On 2021-01-15 07:50 GMT
பரமத்திவேலூர் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 11.15 மணிக்கு மேல் 12 மணிக்குள் மீன லக்கனத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.

இரவு அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) வருகிற 20-ந் தேதி வரை தினந்தோறும் காலை 8 மணிக்கு பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானத்தில் புறப்பாடு மற்றும் குதிரை வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

21-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந் தேதி காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பயாகமும், 25-ந் தேதி இரவு 7 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News