ஆன்மிகம்

தெய்வீக அம்சம் பொருந்திய ருத்ராட்சம்

Published On 2019-04-11 10:02 GMT   |   Update On 2019-04-11 10:02 GMT
புராணங்கள் மற்றும் இதிகாச காலங்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் தெய்வீக அம்சம் பொருந்திய பொருள் ருத்ராட்சம். இது சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.
ஒருமுறை திரிபுரா என்ற அசுரனால், தேவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளானார்கள். மிகவும் மனம் வருந்திய தேவர்கள், அசுரனிடம் இருந்து தங்களை காத்தருளும்படி சிவபெருமானை வேண்டினர். அதனைக் கேட்டு மனம் இரங்கிய சிவபெருமான், அசுரனை எவ்வாறு அழிப்பது என்ற யோசனையில் தவத்தில் அமர்ந்தார்.

நீண்டகாலம் தவத்தில் இருந்த ஈசன், கண் திறந்து பார்த்தார். அப்போது அவரது கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிப்பட்டு பூமியில் விழுந்தது. அவரது கண்ணீர் துளிகள் விழுந்த இடத்தில் இருந்து முளைத்தவைதான் ருத்ராட்ச மரங்கள்.
Tags:    

Similar News