ஆன்மிகம்
கொடைக்கானல் பெரிய காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம்
பெரிய காளியம்மன் கோவில் திருவிழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர்.
கொடைக்கானல் நகர் டோபிகானல் பகுதியில் பெரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் டோபிகானல் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.
விழாவின் இறுதிநாளான நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடத்துடன் டெப்போ காளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் டோபிகானல் இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.