ஆன்மிகம்

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா தொடங்கியது

Published On 2019-02-25 04:40 GMT   |   Update On 2019-02-25 04:40 GMT
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. கோவிலில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் வந்தடைந்தார். மாலை 6.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் தீர்த்த கோஷ்டி நடந்தது.

இரவு 7.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை பொது ஜன சேவை நடந்தது. இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை இதேபோன்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு தாயார் தெப்பம் கண்டருளுகிறார்.

வருகிற 2-ந்தேதி பந்தக்காட்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News