ஆன்மிகம்

பவுர்ணமியில் வக்கிரகாளியம்மனின் சாந்த ரூபம்

Published On 2019-01-08 11:56 IST   |   Update On 2019-01-08 11:56:00 IST
திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது.
திருவக்கரை வக்கிரகாளியம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்குகின்றாள். வக்கிர காளியம்மனுக்கு பவுர்ணமி திதி உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வக்கிர காளியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வார்கள். அன்று இரவு 12 மணிக்கு நடைபெறும் பூஜையில் காளியம்மன் சாந்தருபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுப் பதை காணலாம்.

நினைத்த காரியம் கைகூட வேண்டுபவர்கள், உடல் நலமற்றோர் மற்றும் மன நிம்மதி இழந்தவர்கள் எல்லோரும் பவுர்ணமி தினத்தன்று வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பவுர்ணமி இரவில் தரிசனம் செய்து வருவார்களானால் எண்ணிய காரியம் எளிதாக கைகூடும் என்பது ஐதீகம்.
ராகு-கேது தோஷமா?

ராகு தோஷம், கேது தோஷம் உள்ளவர்கள் திருவக்கரை ஆலயத்திற்கு வந்து உளுந்து, பயித்தம் பருப்பு போன்றவற்றைத் தானமாக வழங்கினால் அவர்களைப் பிடித்து இருந்த தோஷம் நீங்கி வாழ்வில் சுபிட்சம் அடைவார்கள்.
Tags:    

Similar News