ஆன்மிகம்

பால்குடம் எடுப்பதன் பலன்

Published On 2019-01-04 05:36 GMT   |   Update On 2019-01-04 05:36 GMT
பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்கள் மனம் குளிர்ந்து வரம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக் கடனாகப் பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக் கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.

பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.

மேலும் இந்தப் பால்அபிஷேகம் செய்து தெய்வங்களை நாம் குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தரும் என்பது நம்பிக்கை.
Tags:    

Similar News