ஆன்மிகம்

சங்கடங்களை தீர்க்கும் சனிக்கிழமை அமாவாசை

Published On 2018-08-11 11:46 IST   |   Update On 2018-08-11 11:46:00 IST
சனிக்கிழமை என்பது சனீஸ்வரருக்கு உகந்த தினமாகும். சனிக்கிழமையன்று தர்ப்பணம் செய்வதால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகமாகும்.
ஆடி அமாவாசை தினம் இந்த ஆண்டு சனிக்கிழமை வருகிறது. சனிக்கிழமை என்பது சனீஸ்வரருக்கு உகந்த தினமாகும். சனீஸ்வரருக்கு உகந்த தானியம் ‘எள்’ ஆகும். பித்ருக்களின் தாகம் தீர்க்கும் தர்ப்பணத்தில் முக்கிய இடம் பெறுவதும் ‘எள்’ தான்.

அன்று நம் முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகள் செய்த பிறகு சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் சனிபகவனால் உண்டாகும் தோஷங்கள் விலகும். சனிக்கிழமையன்று தர்ப்பணம் செய்வதால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகமாகும்.

Tags:    

Similar News