ஆன்மிகம்
தீப்பாய்ந்த நாச்சியார் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2018-06-30 09:06 IST   |   Update On 2018-06-30 09:06:00 IST
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற தீப்பாய்ந்த நாச்சியார் கோவில். இந்த கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், நாளை(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, கணபதி ஹோமத்துட விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணா குதி நடந்தது. பின்னர் மாலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பூர்ணாகுதி, திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திவார பூஜை, சதுஸ்தான அர்ச்சனம், பூர்ணாகுதி, சாற்று முறை நடக்கிறது.

நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு விஸ்வரூபம், பூர்ணாகுதி நடந்து, காலை 9 மணிக்கு மேல் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் கோபுரத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் குடும்பத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News