ஆன்மிகம்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா

Published On 2018-05-31 04:57 GMT   |   Update On 2018-05-31 04:57 GMT
திருவெறும்பூர் அருகே மலைக்கோவிலில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்தது.
திருவெறும்பூர் அருகே மலைக்கோவிலில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ந் தேதி திருக்கல்யாணமும், 27-ந் தேதி தேர்திருவிழாவும் நடந்தது.

நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. விழாவில் கோவிலின் எதிரே உள்ள தெப்பகுளத்தில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் எழுந்தருளி தெப்பகுளத்தில் 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது. 
Tags:    

Similar News