ஆன்மிகம்
நாளை ஆடி 18 விழா: பவானி கூடுதுறையில் புதுமண தம்பதிகள் குவிகிறார்கள்
தென்னக திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையிலும் நாளை (வியாழக்கிழமை) ஆடி 18 திருநாளை கொண்டாட குவிகிறார்கள்.
நாளை ஆடி 18 விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆடி 18 என்றாலே புதுமண தம்பதிகளுக்கு கொண்டாட்டம் தான்.
இந்த திருநாளில் தான் அவர்கள் நீர் நிலைகளில் குறிப்பாக காவிரி ஆறு பாய்ந்து செல்லும் பகுதிகளில் திரண்டு ஜோடியாக சென்று புனித நீராடி வழிபடுவார்கள்.
தென்னக திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையிலும் நாளை (வியாழக்கிழமை) ஆடி 18 திருநாளை கொண்டாட குவிகிறார்கள்.
பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அமுதநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிப்பதால் கூடுதுறை என்று அழைக்கப்படுகிறது.இங்கு புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.
இதையொட்டி நாளை அதிகாலையில் இருந்தே பவானி கூடுதுறைக்கு புது மண தம்பதிகளும், பக்தர்களும் குவிகிறார்கள்.
புதுமண தம்பதியினர் மணக்கோலத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடி திருமணத்தன்று தங்கள் கழுத்தில் அணிந்திருந்த புதுமாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதை யொட்டி மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில்வந்து கொண்டிருக்கிறது.
இதையொட்டி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டையில் நுழைந்து அம்மாபேட்டை சிங்கம்பேட்டை வழியாக பவானிக்கு வந்து ஈரோடு வழியாக பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் புதுமண தம்பதிகள், பக்தர்கள் புனித நீராட போதுமான தண்ணீர் உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மேலும் கன்னிப்பெண்கள் நாளை பவானி கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி வழிபடுகிறார்கள்.
இந்த திருநாளில் தான் அவர்கள் நீர் நிலைகளில் குறிப்பாக காவிரி ஆறு பாய்ந்து செல்லும் பகுதிகளில் திரண்டு ஜோடியாக சென்று புனித நீராடி வழிபடுவார்கள்.
தென்னக திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையிலும் நாளை (வியாழக்கிழமை) ஆடி 18 திருநாளை கொண்டாட குவிகிறார்கள்.
பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அமுதநதி ஆகிய 3 ஆறுகள் சங்கமிப்பதால் கூடுதுறை என்று அழைக்கப்படுகிறது.இங்கு புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.
இதையொட்டி நாளை அதிகாலையில் இருந்தே பவானி கூடுதுறைக்கு புது மண தம்பதிகளும், பக்தர்களும் குவிகிறார்கள்.
புதுமண தம்பதியினர் மணக்கோலத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடி திருமணத்தன்று தங்கள் கழுத்தில் அணிந்திருந்த புதுமாலைகளை ஆற்றில் விட்டு வழிபடுகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதை யொட்டி மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில்வந்து கொண்டிருக்கிறது.
இதையொட்டி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டையில் நுழைந்து அம்மாபேட்டை சிங்கம்பேட்டை வழியாக பவானிக்கு வந்து ஈரோடு வழியாக பாய்ந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் புதுமண தம்பதிகள், பக்தர்கள் புனித நீராட போதுமான தண்ணீர் உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
மேலும் கன்னிப்பெண்கள் நாளை பவானி கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி வழிபடுகிறார்கள்.