ஆன்மிகம்
போர்மன்னலிங்கேஸ்வரர் தேரில் பக்தர்கள் வெள்ளத்தில் உலா வந்த காட்சி.

மங்கலம் கிராமத்தில் போர் மன்னலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா

Published On 2017-03-16 10:46 IST   |   Update On 2017-03-16 10:46:00 IST
திருவண்ணாமலை அருகே மங்கலம் கிராமத்தில் நடந்த போர் மன்னலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த போர் மன்னலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 5 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. முதல்நாள் விநாயகர் ஊர்வலமும், 2-ம் நாளான 11-ந் தேதி இரவு பாலமுருகன் ஊர்வலமும், 12-ந் தேதி இரவு பராசக்தி ஊர்வலமும், 13-ந் தேதி பரிவார தேவதைகள் ஊர்வலமும், அன்றிரவு மகா கும்பமும், அருள்வாக்கும் நடந்தது.

மகா கும்பத்தில் குழந்தை இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு சாமிக்கு படையலிட்ட உணவை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். எனவே இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு படையிலிட்ட உணவை வாங்கி சாப்பிட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலையில் தேரில் சாமி எழுந்தருள செய்யப்பட்டதும் பூஜைகள் நடந்தன. பின்னர் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், கோவில் அறங்காவல் குழுத்தலைவர் அருள்பழனி ஆகியோர் தேர் வலம் வருவதை தொடங்கி வைத்தனர்.

விழாவில் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அரங்கநாதன், எம்.கே.குமார் உள்பட மங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News