ஆன்மிகம்
சிவபெருமான் படியளக்கும் லீலை: அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சுவாமி சிவபெருமான், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்தார் என புராணம் நேற்று காலை 4.30 மணியளவில் நடந்தது.
சுவாமி சிவபெருமான், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளந்தார் என புராணம் கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற நாளையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று காலை 4.30 மணியளவில் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. அதன்பிறகு சுவாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு தொடங்கியது.
அதனைதொடர்ந்து சுவாமி அம்பாள் உள்பட பஞ்சமூர்த்திகள் வீதிஉலா தொடங்கியது. இந்த வீதிஉலா நகரின் முக்கிய வீதிகளில் வலம் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுவாமி சிவபெருமான் படியளந்த நாள் என்பதால் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக அரிசி வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதனைதொடர்ந்து சுவாமி அம்பாள் உள்பட பஞ்சமூர்த்திகள் வீதிஉலா தொடங்கியது. இந்த வீதிஉலா நகரின் முக்கிய வீதிகளில் வலம் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுவாமி சிவபெருமான் படியளந்த நாள் என்பதால் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக அரிசி வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.