ஆன்மிகம்

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 16-ந் தேதி ஏகதின பிரமோற்சவம்

Published On 2016-10-14 09:30 GMT   |   Update On 2016-10-14 09:30 GMT
பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரமோற்சவம் 16-ந் தேதி நடக்கிறது.
பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது ஹேமாம் புஜவல்லி சமேத சரநாராயண பெருமாள் கோவில்.

இது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு ஏகதின பிரமோற்சவ உற்சவம் நாளை மறுநாள் (16-ந் தேதி) நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு விடியற்காலை 4 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு தோமாலை சேவை, 6 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு அம்ச வாகன சேவை, 9 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 11 மணிக்கு சே‌ஷ வாகன சேவை, 12 மணிக்கு கருட வாகன சேவை, 3 மணிக்கு யானை வாகன சேவை, 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவை, 6 மணிக்கு திருத்தேர் உற்சவ சேவை, 7 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 7 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது

இதற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் ஆலய தக்கார் ஜெயசித்ரா, செயல் அலுவலர் ராஜாசர வணகுமார், ஆலய அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் மற்றும் விழாக்குவினர் செய்துவருகின்றனர்.

Similar News