ஆன்மிகம்

சூரியன் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம்

Published On 2017-01-23 04:14 GMT   |   Update On 2017-01-23 04:14 GMT
சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.
சென்னை, வண்டலூரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.

இங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரர் என்றும் தாயார் ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றன. இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.

இது தொண்டை மண்டலத்தின் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு அகத்தியரும் வாகீச முனிவரும் வந்து வழிபட்டிருக்கின்றனர்.

இது 1300 ஆண்டுகளுக்கும் பழமையான திருத்தலமாகும். இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தப்படி மேற்கு நோக்கிய திசையில் சூரிய பகாவனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சூரியன் சிவனை வணங்குவதாக ஐதீகம். எனவே இக்கோவிலில் சூரியனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குவதால் பக்தர்கள் இங்கு வந்து தோஷ நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

மூலச் சந்நிதியின் பின்புறம், தென்கிழக்கில் ராஜகணபதி அமர்ந்து காட்சி தருகிறார். அதன் பக்கத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மையாரும் அருள் பாலிக்கிறார்கள். அதன் பக்கத்தில் ருனஹர ஈஸ்வரர் அருள்பாலிக்கிறார். மனதில் ஏற்படும் ரணங்களை தீர்க்கவல்லர் என்பது ஐதீகம்.

வடமேற்கு மூலையில் முருகன் வள்ளி தெய்வாயானையுடன் காட்சி தருகிறார். முருக வாகனமான மயில் மரக பச்சை கல்லால் செய்யப்பட்டது என்பது ஒரு சிறப்பு. வடக்கிழக்கு மூலையில் பைரவருக்கான தனி சந்நிதி உண்டு.

சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால், அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சூரியனுக்குரிய பரிகார பூஜைகளை செய்யலாம். சென்னையில் அமைந்துள்ள அற்புதமான சூரியன் தலம் அனைவரும் சென்று காண வேண்டிய திருத்தலம்.

Similar News