ஆன்மிகம்
செட்டிக்குளத்தில் மலைமேல் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவில்
செட்டிக்குளத்தில் உள்ள மலைக்குன்றின் மீது தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் முருகன் வேலுக்கு பதிலாக கையில் செங்கரும்பை ஏந்தியபடி காட்சிதருகிறார்.
செட்டிக்குளத்தில் உள்ள மலைக்குன்றின் மீது தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான், வேலுக்கு பதிலாக கையில் செங்கரும்பை ஏந்தியபடி காட்சிதருகிறார். இந்த சிறப்பு வேறு எந்த முருகன் தலத்திலும் இல்லாததாகும். மலைக்கு செல்ல சிமெண்டு சாலையும், படிக்கட்டுகளும் உள்ளன.
கடம்ப வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு தொல்லைகொடுத்த அசுரர்களை, முருகப்பெருமான் தன் கையில் இருந்த வேலால் வீழ்த்தி வெற்றி கொண்டார். அந்த முருகப்பெருமானுக்கு, இந்த ஊரில் உள்ள காமாட்சி அம்மன் செங்கரும்பை வழங்கி வாழ்த்தினார். எனவே அம்மன் கொடுத்த செங்கரும்புடனேயே இத்தல முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால் ஞானமும், வாழ்வில் இனிமையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மலை மீதுள்ள கருவறையில் மேற்கு நோக்கிய வண்ணம், 4 அடி உயரத்தில் தண்டாயுதபாணி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரது சிலை மீது மாசி மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி விழுவது சிறப்புக்குரியதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். அப்போது நடைபெறும் தேர்த் திருவிழாவில் இரட்டை தேரோட்டம் நடைபெறும்.
மலை அடிவாரம் மற்றும் உச்சியில் ராஜகணபதி சன்னிதி உள்ளது. மலையில் இருந்து இறங்கும் வழியில் இடும்பன், வீரபாகு ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. பொதுவாக எல்லா ஆலயத்திலும் திருவிழா காலங்களில் ஒரு நாள் மட்டுமே திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஆனால் இங்குள்ள முருகப்பெருமானுக்கு, ஒவ்வொரு உற்சவத்தின் போதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது முருகப்பெருமானை வணங்கினால் திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.
கோவில் தல விருட்சம் வில்வமரமாகும். பஞ்சநதி குளம் என்ற தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் அகத்திய முனிவர் மற்றும் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்றதாகும். இங்கு வெள்ளிக் கிழமை மற்றும் இதர விசேஷ தினங்களில் வெள்ளி ரத உலா நடைபெறும். பவுணர்மி நாளில் மலைக்குன்றை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதும் உண்டு. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், சஷ்டி நாளில் இத்தல முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், பங்குனி உத்திர திருவிழாவின்போது, கரும்பு தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
சித்திரை 1-ந் தேதி படிவிழாவும், வைகாசி விசாக திருவிழா மற்றும் சங்காபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. ஐப்பசி கந்தசஷ்டி விழாவை ஒட்டி 7 நாட்கள் லட்சார்ச்சனையும், அபிசேக ஆராதனைகளும் நடைபெறும். கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், ஆடிக்கிருத்திகை விழாவும் சிறப்புக்குரியது.
இக்கோவிலில் தற்போது அனைத்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. சிலமாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கடம்ப வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் மற்றும் ரிஷிகளுக்கு தொல்லைகொடுத்த அசுரர்களை, முருகப்பெருமான் தன் கையில் இருந்த வேலால் வீழ்த்தி வெற்றி கொண்டார். அந்த முருகப்பெருமானுக்கு, இந்த ஊரில் உள்ள காமாட்சி அம்மன் செங்கரும்பை வழங்கி வாழ்த்தினார். எனவே அம்மன் கொடுத்த செங்கரும்புடனேயே இத்தல முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால் ஞானமும், வாழ்வில் இனிமையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மலை மீதுள்ள கருவறையில் மேற்கு நோக்கிய வண்ணம், 4 அடி உயரத்தில் தண்டாயுதபாணி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரது சிலை மீது மாசி மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி விழுவது சிறப்புக்குரியதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். அப்போது நடைபெறும் தேர்த் திருவிழாவில் இரட்டை தேரோட்டம் நடைபெறும்.
மலை அடிவாரம் மற்றும் உச்சியில் ராஜகணபதி சன்னிதி உள்ளது. மலையில் இருந்து இறங்கும் வழியில் இடும்பன், வீரபாகு ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன. பொதுவாக எல்லா ஆலயத்திலும் திருவிழா காலங்களில் ஒரு நாள் மட்டுமே திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஆனால் இங்குள்ள முருகப்பெருமானுக்கு, ஒவ்வொரு உற்சவத்தின் போதும், ஒருநாள் விட்டு ஒரு நாள் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது முருகப்பெருமானை வணங்கினால் திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை.
கோவில் தல விருட்சம் வில்வமரமாகும். பஞ்சநதி குளம் என்ற தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் அகத்திய முனிவர் மற்றும் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்றதாகும். இங்கு வெள்ளிக் கிழமை மற்றும் இதர விசேஷ தினங்களில் வெள்ளி ரத உலா நடைபெறும். பவுணர்மி நாளில் மலைக்குன்றை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வதும் உண்டு. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், சஷ்டி நாளில் இத்தல முருகனுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், பங்குனி உத்திர திருவிழாவின்போது, கரும்பு தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி கோவிலை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
சித்திரை 1-ந் தேதி படிவிழாவும், வைகாசி விசாக திருவிழா மற்றும் சங்காபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. ஐப்பசி கந்தசஷ்டி விழாவை ஒட்டி 7 நாட்கள் லட்சார்ச்சனையும், அபிசேக ஆராதனைகளும் நடைபெறும். கார்த்திகை மகா தீபத் திருவிழாவும், ஆடிக்கிருத்திகை விழாவும் சிறப்புக்குரியது.
இக்கோவிலில் தற்போது அனைத்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. சிலமாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.