ஆன்மிகம்
அறியாமையை போக்கும் ஞான சபேசர் கோவில்
தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானத்தை அழித்த ஈசன், அவர்களுக்கு மெய்ஞானம் வழங்கிய புனிதமான திருத்தலம் இது.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வழுவூர். இங்கு 11-ம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்ட ஞானசபேசர் கோவில் அமைந்துள்ளது. தாருகாவனத்து முனிவர்களின் அஞ்ஞானத்தை அழித்த ஈசன், அவர்களுக்கு மெய்ஞானம் வழங்கிய புனிதமான திருத்தலம் இது.
விஸ்வேஸ்வர சம்ஹிதை எனும் ஈசான சம்ஹிதையை, சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்தார். இது 10 ஆயிரம் சுலோகங்களைக் கொண்டது. இதில் கஜாசுர வதம் விரிவாக கூறப்பட்டுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூரைப் பற்றியும், அங்கு நடைபெற்ற கஜாசுர வத நிகழ்வையும் சிவபுராணம், கந்த புராணம் மற்றும் பத்ம புராணம் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கின்றன. பிப்பலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட இடமே ‘வழுவூர்’ என்று சொல்லப்படுகிறது.
தல வரலாறு :
தாருகாவனத்து ரிஷிகள் 48 ஆயிரம் பேர் வேள்விகளின் பலனாக, தவ வலிமை பெற்று விரும்பிய வரமனைத்தும் கிடைக்கப் பெற்றனர். இதனால் செருக்குற்று ஆணவத்துடன் இறைவனை மறந்து, தாங்களே எல்லாம் என்று நினைக்கத் தொடங்கினர்.
ரிஷி மற்றும் ரிஷி பத்தினிகளின் ஆணவத்தை அழிக்கும் பொருட்டு, பரமேஸ்வரன் ‘பிட்சாடனராகவும்’, திருமால் ‘மோகினி’யாகவும் தாருகாவனம் சென்றனர். ஆணவத்தால் ஞானத்தை இழந்திருந்த ரிஷிகளுக்கு வந்திருப்பது திருமால் என்று அறிய முடியாமல் போயிற்று. அவர்கள் மோகினியின் அழகில் மயங்கி, தங்களது தவ வலிமை அனைத்தையும் இழந்தனர்.
இதே போல் ரிஷி பத்தினிகள் அனைவரும் பிட்சாடன மூர்த்தியின் சவுந்தர்யத்தால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் சென்றனர். மிக தாமதமாக இந்த மாயையை உணர்ந்து கொண்ட முனிவர்கள், சிவபெருமான் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் வேள்வி செய்து, அக்னி, புலி, மான், நாகம் போன்றவற்றை இறைவன் மீது ஏவினார்கள். அவை எல்லாவற்றையும் சிவனார் அருள் கூர்ந்து தன் உடைமைகளாக ஏற்றுக்கொண்டார்.
இறுதியில் வேள்வியில் இருந்து யானை ஒன்று தோன்றி சிவபெருமானை நோக்கி மதம் கொண்டு ஓடியது. அந்த கஜாசுரனை, சிவபெருமானை தலையில் தாக்கினார். இறைவனின் தாக்குதலை தாங்க முடியாமல் கஜாசுரன், தம்மை ஏவிய முனிவர்களை நோக்கி, அவர்களை அழிக்க முற்பட்டான்.
தங்களது ஆணவத்தால் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்த முனிவர்கள், தங்களை காத்தருளும்படி சிவபெருமானை பிரார்த்தித்தனர். கருணையே வடிவான இறைவனும், தவறை உணர்ந்த முனிவர்களை காக்கும் பொருட்டு கஜாசுரனின் உடலினுள் புகுந்தார். இறைவனது வெம்மையை தாங்க முடியாமல் யானை பஞ்ச பிரம்ம தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் விழுந்தது. இதனால் இத்தீர்த்தம் ‘ஹஸ்தி புஷ்கரணி’ என்று பெயர் பெற்றது.
கணவனை காணாத அம்பிகை வருத்தம் அடைந்தாள். அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றபோது, இறைவன் யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டார். அப்போது முருகப்பெருமான், தன் தாயாருக்கு ‘இதோ தந்தை’ என்று சுட்டிக்காட்டினார். யானையில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி சம்ஹார தாண்டவம் நிகழ்த்தினார் என்பது தல வரலாறு.
அருள் தரும் இறைவன் :
இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாவார். இவர் கிருத்திவாசேசர், வீரட்டேஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி மற்றும் ஞானசபேசர் போன்ற திருநாமங்களுடன் போற்றப்படுகிறார். இத்தல இறைவன் உயிர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தை வழங்குவதால் ஞானசபேசர் என்ற பெயர் சிறப்புக்குரியதாக உள்ளது.
அம்பாள் இடுப்பில் முருகப்பெருமானை வைத்தபடி, அழகிய திருமேனியுடன் காட்சி தருகிறார். முருகன் ஒரு விரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தை தூக்கி வைத்து, நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் தலபுராணத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
சுவாமிமலையில் குழந்தையான முருகப்பெருமான், தந்தையான ஈஸ்வரருக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக காட்சி தருகிறார். அதேபோல இந்த தலத்தில் அம்பிக்கைக்கு ஞான வடிவாகிய ஈஸ்வரனை சுட்டிக்காட்டும் தோரணையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
தீர்த்தக் குளம் :
இந்த தலத்தில் உள்ள ‘ஹஸ்தி புஷ்கரணி’ தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வாத, பித்த, கப நோய்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புஷ்கரணி தீர்த்தம், ‘பஞ்ச பிரம்ம தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்டது என்கிறது தல புராணம்.
இந்தத் தீர்த்தக் குளம் நந்தி தேவருக்கும், சிவபெருமானுக்கு இடையே அமைந்திருப்பது விசேஷமானதாகும். இங்கு நீராடி முன்னோர்களுக்கு செய்யப்படும் பித்ரு கடன், காசி மற்றும் கயாவில் செய்வதற்கு ஒப்பானதாகும். ஐப்பசி அமாவாசை அன்று 66 கோடி தீர்த்தங்கள் இத்தடாகத்தில் கூடுவதாகவும், அப்போது இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள் விரும்பியதை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி மிக விசேஷமானதாகும். வழக்கமாக வெவ்வேறு திசைகளில் தோன்றும் சனியும், குருவும், இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் நேரெதிரே வீற்றிருப்பது போல் காட்சி தருகின்றனர். இது ஒரு சனி தோஷ நிவர்த்தி தலமாகும். சனிக்கிழமைகளில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய், குளத்து நீர், இளநீர், பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, நீல பட்டாடை உடுத்தி, வன்னி, வில்வ இலைகளால் அர்ச்சித்து, உளுந்து வடை, எள் கலந்த உளுந்தன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, நீண்ட ஆயுளும், நிலைத்த செல்வமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். இத்தலத்தில் சனி பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. சனி பகவான் வில்லுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
திருவிழாக்கள் :
இந்த ஆலயத்தில் மாசி மகம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் பூசம், ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திர தினங்களில் கஜசம்ஹார உற்சவம் நடைபெறுகிறது. உற்சவ இரண்டாம் நாளில் கஜசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படுவது காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.
பங்குனி மற்றும் சித்திரையில் பத்து நாள் நடைபெறும் வசந்த உற்சவ விழா, சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அப்பருக்கு மோட்சம் அளித்த நாள், வைகாசி மாதத்தில் பத்து நாள் நடைபெறும் பிரமோற்சவம், ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூரம், மார்கழி மாதத்தில் நடைபெறும் மாணிக்கவாசகர் உற்சவம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரியுடன் நடைபெறும் உற்சவம் போன்றவை சிறப்பானதாகும்.
அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்திருக்கும்.
கோவில் சிறப்புகள் :
* திருவாலங்காடு, திருவெண்காடு, சிதம்பரம், மதுரை, கும்பகோணம், திருவதிகை, திருச்செங்காட்டான்குடி, கயிலாயம் ஆகிய எட்டு தலங்களுடன், இந்த வழுவூரும் ஒரு தாண்டவ ஷேத்திரமாகும்.
* மயிலாடுதுறையை சுற்றியுள்ள புகழ்பெற்ற அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை, திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி இவற்றுடன் திருவழுவூரும் இடம்பெறும்.
* திருவாலங்காடு (ரத்தினசபை), சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளிசபை), திருநெல்வேலி (தாமிரசபை), திருக்குற்றாலம் (சித்திரசபை) உள்ளிட்ட சபைகளில், முனிவர்களுக்கு ஞானம் வழங்கிய வழுவூர் தலம் ஞானசபையாக போற்றப்படுகிறது.
* தட்சிண கயிலாயம் என்ற புகழ் பெற்ற காளஹஸ்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை முதலியவற்றுடன், வழுவூரும் தென் கயிலாயம் என்ற புகழைப் பெற்றது.
* லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பீஷண பைரவர் முதலிய பைரவர்களில், வழுவூரிலுள்ள கஜாசுர சம்ஹார மூர்த்தியான கங்கால பைரவரும் இடம்பெறுவார்.
* பிரளய காலத்திலும் கூட அழியாத தலங்களாக போற்றப்படும் காஞ்சி, சீர்காழி, கும்பகோணம், நீடூர், சாக்கோட்டை, கீழ்வேளூர், திருப்புறம்பியம், திருநெல்வாயில் முதலிய ஷேத்திரங்களுடன் வழுவூரும் முக்கிய இடம்பெறும். பிரளயத்திலிருந்து வழுவிய காரணத்தாலேயே இந்த ஊர் ‘வழுவூர்’ என்று பெயர் பெற்றதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. வழுவூரை நான்கு யுகங்கள் பழமையான ஷேத்திரமாக புராணங்கள் விவரிக்கின்றன.
* வசிஷ்டர், அத்திரி, அகஸ்தியர், கண்வர், காத்யாயனர் முதலிய ரிஷிகளும், வீரசோழன் உள்ளிட்ட பல சோழ அரசர்களும் வழிவழியாக பூஜித்து வந்த இத்தலம் இது என்று அறியப்படுகிறது.
* நாட்டிய சம்பந்தமான 108 கரணங்கள் மற்றும் தல வரலாறு சம்பந்தமான தொன்மையான ஓவியங்கள் போன்றவை இந்த ஆலயத்தின் பிரகார சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன.
விஸ்வேஸ்வர சம்ஹிதை எனும் ஈசான சம்ஹிதையை, சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்தார். இது 10 ஆயிரம் சுலோகங்களைக் கொண்டது. இதில் கஜாசுர வதம் விரிவாக கூறப்பட்டுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான வழுவூரைப் பற்றியும், அங்கு நடைபெற்ற கஜாசுர வத நிகழ்வையும் சிவபுராணம், கந்த புராணம் மற்றும் பத்ம புராணம் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கின்றன. பிப்பலவனம், சமீவனம், தாருகாவனம், பதரிகாவனம் ஆகிய நான்கு வனங்களால் சூழப்பட்ட இடமே ‘வழுவூர்’ என்று சொல்லப்படுகிறது.
தல வரலாறு :
தாருகாவனத்து ரிஷிகள் 48 ஆயிரம் பேர் வேள்விகளின் பலனாக, தவ வலிமை பெற்று விரும்பிய வரமனைத்தும் கிடைக்கப் பெற்றனர். இதனால் செருக்குற்று ஆணவத்துடன் இறைவனை மறந்து, தாங்களே எல்லாம் என்று நினைக்கத் தொடங்கினர்.
ரிஷி மற்றும் ரிஷி பத்தினிகளின் ஆணவத்தை அழிக்கும் பொருட்டு, பரமேஸ்வரன் ‘பிட்சாடனராகவும்’, திருமால் ‘மோகினி’யாகவும் தாருகாவனம் சென்றனர். ஆணவத்தால் ஞானத்தை இழந்திருந்த ரிஷிகளுக்கு வந்திருப்பது திருமால் என்று அறிய முடியாமல் போயிற்று. அவர்கள் மோகினியின் அழகில் மயங்கி, தங்களது தவ வலிமை அனைத்தையும் இழந்தனர்.
இதே போல் ரிஷி பத்தினிகள் அனைவரும் பிட்சாடன மூர்த்தியின் சவுந்தர்யத்தால் ஈர்க்கப்பட்டு அவர் பின்னால் சென்றனர். மிக தாமதமாக இந்த மாயையை உணர்ந்து கொண்ட முனிவர்கள், சிவபெருமான் மீது கடும் கோபம் கொண்டனர். அவர்கள் வேள்வி செய்து, அக்னி, புலி, மான், நாகம் போன்றவற்றை இறைவன் மீது ஏவினார்கள். அவை எல்லாவற்றையும் சிவனார் அருள் கூர்ந்து தன் உடைமைகளாக ஏற்றுக்கொண்டார்.
இறுதியில் வேள்வியில் இருந்து யானை ஒன்று தோன்றி சிவபெருமானை நோக்கி மதம் கொண்டு ஓடியது. அந்த கஜாசுரனை, சிவபெருமானை தலையில் தாக்கினார். இறைவனின் தாக்குதலை தாங்க முடியாமல் கஜாசுரன், தம்மை ஏவிய முனிவர்களை நோக்கி, அவர்களை அழிக்க முற்பட்டான்.
தங்களது ஆணவத்தால் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்த முனிவர்கள், தங்களை காத்தருளும்படி சிவபெருமானை பிரார்த்தித்தனர். கருணையே வடிவான இறைவனும், தவறை உணர்ந்த முனிவர்களை காக்கும் பொருட்டு கஜாசுரனின் உடலினுள் புகுந்தார். இறைவனது வெம்மையை தாங்க முடியாமல் யானை பஞ்ச பிரம்ம தீர்த்தத்தின் வடமேற்கு மூலையில் விழுந்தது. இதனால் இத்தீர்த்தம் ‘ஹஸ்தி புஷ்கரணி’ என்று பெயர் பெற்றது.
கணவனை காணாத அம்பிகை வருத்தம் அடைந்தாள். அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல முயன்றபோது, இறைவன் யானையின் உடலைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டார். அப்போது முருகப்பெருமான், தன் தாயாருக்கு ‘இதோ தந்தை’ என்று சுட்டிக்காட்டினார். யானையில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி சம்ஹார தாண்டவம் நிகழ்த்தினார் என்பது தல வரலாறு.
அருள் தரும் இறைவன் :
இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன், சுயம்பு மூர்த்தியாவார். இவர் கிருத்திவாசேசர், வீரட்டேஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி மற்றும் ஞானசபேசர் போன்ற திருநாமங்களுடன் போற்றப்படுகிறார். இத்தல இறைவன் உயிர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தை வழங்குவதால் ஞானசபேசர் என்ற பெயர் சிறப்புக்குரியதாக உள்ளது.
அம்பாள் இடுப்பில் முருகப்பெருமானை வைத்தபடி, அழகிய திருமேனியுடன் காட்சி தருகிறார். முருகன் ஒரு விரலை பக்கத்திலுள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் நிலையில் இருப்பதும், அம்பிகை ஒரு பாதத்தை தூக்கி வைத்து, நடந்து செல்ல முயலும் அமைப்பில் இருப்பதும் தலபுராணத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
சுவாமிமலையில் குழந்தையான முருகப்பெருமான், தந்தையான ஈஸ்வரருக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக காட்சி தருகிறார். அதேபோல இந்த தலத்தில் அம்பிக்கைக்கு ஞான வடிவாகிய ஈஸ்வரனை சுட்டிக்காட்டும் தோரணையில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
தீர்த்தக் குளம் :
இந்த தலத்தில் உள்ள ‘ஹஸ்தி புஷ்கரணி’ தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் வாத, பித்த, கப நோய்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இந்த புஷ்கரணி தீர்த்தம், ‘பஞ்ச பிரம்ம தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் பிரம்மதேவரால் உருவாக்கப்பட்டது என்கிறது தல புராணம்.
இந்தத் தீர்த்தக் குளம் நந்தி தேவருக்கும், சிவபெருமானுக்கு இடையே அமைந்திருப்பது விசேஷமானதாகும். இங்கு நீராடி முன்னோர்களுக்கு செய்யப்படும் பித்ரு கடன், காசி மற்றும் கயாவில் செய்வதற்கு ஒப்பானதாகும். ஐப்பசி அமாவாசை அன்று 66 கோடி தீர்த்தங்கள் இத்தடாகத்தில் கூடுவதாகவும், அப்போது இந்தத் தீர்த்தத்தில் நீராடுபவர்கள் விரும்பியதை பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
இங்குள்ள நவக்கிரக சன்னிதி மிக விசேஷமானதாகும். வழக்கமாக வெவ்வேறு திசைகளில் தோன்றும் சனியும், குருவும், இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் நேரெதிரே வீற்றிருப்பது போல் காட்சி தருகின்றனர். இது ஒரு சனி தோஷ நிவர்த்தி தலமாகும். சனிக்கிழமைகளில் இத்தல இறைவனுக்கு நல்லெண்ணெய், குளத்து நீர், இளநீர், பசும்பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து, நீல பட்டாடை உடுத்தி, வன்னி, வில்வ இலைகளால் அர்ச்சித்து, உளுந்து வடை, எள் கலந்த உளுந்தன்னம் நிவேதனம் செய்து வழிபட்டால் சனிதோஷம் நீங்கி, நீண்ட ஆயுளும், நிலைத்த செல்வமும் பெறுவார்கள் என்பது ஐதீகம். இத்தலத்தில் சனி பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. சனி பகவான் வில்லுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
திருவிழாக்கள் :
இந்த ஆலயத்தில் மாசி மகம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் பூசம், ஆயில்யம் மற்றும் மகம் நட்சத்திர தினங்களில் கஜசம்ஹார உற்சவம் நடைபெறுகிறது. உற்சவ இரண்டாம் நாளில் கஜசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படுவது காண கிடைக்காத அற்புத காட்சியாகும்.
பங்குனி மற்றும் சித்திரையில் பத்து நாள் நடைபெறும் வசந்த உற்சவ விழா, சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் அப்பருக்கு மோட்சம் அளித்த நாள், வைகாசி மாதத்தில் பத்து நாள் நடைபெறும் பிரமோற்சவம், ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பூரம், மார்கழி மாதத்தில் நடைபெறும் மாணிக்கவாசகர் உற்சவம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தீர்த்தவாரியுடன் நடைபெறும் உற்சவம் போன்றவை சிறப்பானதாகும்.
அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்திருக்கும்.
கோவில் சிறப்புகள் :
* திருவாலங்காடு, திருவெண்காடு, சிதம்பரம், மதுரை, கும்பகோணம், திருவதிகை, திருச்செங்காட்டான்குடி, கயிலாயம் ஆகிய எட்டு தலங்களுடன், இந்த வழுவூரும் ஒரு தாண்டவ ஷேத்திரமாகும்.
* மயிலாடுதுறையை சுற்றியுள்ள புகழ்பெற்ற அட்ட வீரட்டான தலங்களான திருக்கண்டியூர், திருக்கடவூர், திருவதிகை, திருப்பறியலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி இவற்றுடன் திருவழுவூரும் இடம்பெறும்.
* திருவாலங்காடு (ரத்தினசபை), சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளிசபை), திருநெல்வேலி (தாமிரசபை), திருக்குற்றாலம் (சித்திரசபை) உள்ளிட்ட சபைகளில், முனிவர்களுக்கு ஞானம் வழங்கிய வழுவூர் தலம் ஞானசபையாக போற்றப்படுகிறது.
* தட்சிண கயிலாயம் என்ற புகழ் பெற்ற காளஹஸ்தி, திருச்சிராப்பள்ளி, திரிகோணமலை முதலியவற்றுடன், வழுவூரும் தென் கயிலாயம் என்ற புகழைப் பெற்றது.
* லோக பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர், பீஷண பைரவர் முதலிய பைரவர்களில், வழுவூரிலுள்ள கஜாசுர சம்ஹார மூர்த்தியான கங்கால பைரவரும் இடம்பெறுவார்.
* பிரளய காலத்திலும் கூட அழியாத தலங்களாக போற்றப்படும் காஞ்சி, சீர்காழி, கும்பகோணம், நீடூர், சாக்கோட்டை, கீழ்வேளூர், திருப்புறம்பியம், திருநெல்வாயில் முதலிய ஷேத்திரங்களுடன் வழுவூரும் முக்கிய இடம்பெறும். பிரளயத்திலிருந்து வழுவிய காரணத்தாலேயே இந்த ஊர் ‘வழுவூர்’ என்று பெயர் பெற்றதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது. வழுவூரை நான்கு யுகங்கள் பழமையான ஷேத்திரமாக புராணங்கள் விவரிக்கின்றன.
* வசிஷ்டர், அத்திரி, அகஸ்தியர், கண்வர், காத்யாயனர் முதலிய ரிஷிகளும், வீரசோழன் உள்ளிட்ட பல சோழ அரசர்களும் வழிவழியாக பூஜித்து வந்த இத்தலம் இது என்று அறியப்படுகிறது.
* நாட்டிய சம்பந்தமான 108 கரணங்கள் மற்றும் தல வரலாறு சம்பந்தமான தொன்மையான ஓவியங்கள் போன்றவை இந்த ஆலயத்தின் பிரகார சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன.