ஆன்மிகம்
மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவில்
மதனகோபால சுவாமிக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டாலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலோ சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
பெரம்பலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் பாண்டிய நாட்டு மன்னனான திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியனால் 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. சாபம் ஒன்றால் புலியாக மாறிய வியாக்ரபாத மகரிஷியின் சாபம் நீங்கிய தலம் இதுவாகும்.
புலியாக மாற சாபம் :
முன்பொரு முறை துர்வாசரிடம் சீடராக இருந்தார் ஒரு முனிவர். ஒரு நாள் கவனக் குறைவாக தனது குருவின் கமண்டல நீரை தட்டிவிட்டு விட்டார் அந்த முனிவர். இதனால் கோபமடைந்த துர்வாசம், அந்த முனிவரை புலியாக மாறி காட்டில் உலவும்படி சாபம் கொடுத்தார். இதனால் பயந்து போன முனிவர், தன்னுடைய சாபம் நீங்க வழி கூறும்படி துர்வாசரிடம் வேண்டினார்.
இதையடுத்து, ‘நீ புலியாக காட்டில் உலவும் வேளையில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனால் தாக்கப்படுவாய். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்’ என்று கூறி அருளினார்.
சாபத்தால் புலியாக மாறிய முனிவர், காட்டில் சுற்றித்திரிந்தார். மேலும் முன்வினை பயனாக, காட்டிற்குள் இருந்த பெருமாளையும் தினமும் பூஜித்து வந்தார்.
இந்த நிலையில் வன வாசம் காரணமாக பஞ்ச பாண்டவர்கள் அந்த வனத்திற்கு வந்தனர். அவர்களும் அங்கிருந்து பெருமாளை வழிபாடு செய்தனர். ஒரு நாள் பூஜைக்காக தண்ணீர் கொண்டுவர அருகில் இருந்த குளத்திற்கு சென்றாள் திரவுபதி. அப்போது அங்கிருந்த புலி ஒன்று அவளைத் துரத்தியது. அதனிடம் இருந்து தப்பித்து இருப்பிடம் திரும்பினாள். அவளது பதற்றத்தைக் கண்ட பீமன், நடந்தது பற்றி விசாரித்தான். அப்போது திரவுபதி தன்னை புலி ஒன்று துரத்தியதைக் கூறினாள்.
விமோசனம் பெற்ற முனிவர் :
அந்த இடத்திற்கு சென்றான் பீமன். அவனைக் கண்டதும் புலி, அவன் மீதும் பாய்ந்தது. ஆனால் தன்னுடைய கதாயுதத்தால் புலியை தாக்கினான் பீமன். கீழே விழுந்த புலி, எழுந்தபோது முனிவராக மாறியிருந்தது. முனிவரை தாக்கிவிட்டோமே என்று பதறிப்போனான் பீமன். முனிவரிடம் மன்னிப்பு வேண்டினான். அவனைக் கனிவுடன் பார்த்த முனிவர், தனது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சென்னார். தனக்கு நன்மை செய்த அவனது வீரம், பன் மடங்கு பெருகும்படி வரம் அருளினார்.
வியாக்ரம் என்றால் புலி என்று பொருள். புலியின் வடிவில் இருந்ததால் அந்த முனிவர் வியாக்ர முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்தத் தலமும் வியாக்ரமபுரம் என்றானது. தமிழில் பெரும்புலிவனம், பெரும்புலியூர் என்பதாகும். பெரும்புலியூர் என்பதே மருவி பெரம்பலூர் என்றானதாகவும் சொல்வார்கள்.
ஆலய அமைப்பு :
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது திருக்கோவில். ராஜகோபுரத்தின் முன்பாக பெரிய தீப ஸ்தம்பம் உள்ளது. இதன் கீழ் திருமாலின் சிறிய திருவடியான அனுமன் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னிதிகள் இருக்கின்றன.
அதைக் கடந்து முகப்பு மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து மூலவரான மதனகோபால சுவாமி சன்னிதி காணப்படுகிறது. கருவறை வாசலில் துவாரபாலகர்களான ஜெயன்– விஜயன் வீற்றிருக்கின்றனர். உள்ளே மூலவர் மதனகோபால சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அருகிலேயே மரகதவல்லி தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அம்பாளை வணங்கினால் திருமணத் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் மதில் சுவரின் நீளம் 274 அடி, அகலம் 138 அடி ஆகும். கோவிலுக்கு 2 பிரகாரமும், கோவிலுக்கு வெளியே அக்ரகாரத்தில் மற்றொரு பிரகாரமும் உள்ளது. கோவிலின் உட்பிர காரத்தில் தும்பிக்கை ஆழ்வார், வைகுண்ட நாதன், வியாக்ரபாதர், விஷ்ணுதுர்க்கை மற்றும் பன்னிரு ஆழ்வார்கள், விஷ்வக்சேனர் சிலைகளும் அமைந்துள்ளன.
மகாமண்டபத்தின் வெளியே வடபுறம் ஆண்டாள் சன்னிதி, கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர், தென்புறம் உடையவர் சன்னிதி, கல்யாண விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. மரகதவல்லி தாயார் சன்னிதியின் பின் பகுதியில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. இது தவிர லட்சுமி ஹயக்கிரீவர் சன்னிதி, நவநீதகிருஷ்ணன் சன்னிதி, தன்வந்தரி, ஞானசரஸ்வதி சன்னிதி, கணேசர், நாகர் சன்னிதி மற்றும் ராம, சீதா, அனுமன் ஆகியோர் வீற்றிருக்கும் சன்னிதி போன்றவை உள்ளன.
வனவாசத்தின் போது இங்கிருந்து பெருமாளை வழிபட்டனர் பஞ்ச பாண்டவர்கள். அப்போது அருகில் இருந்த தீர்த்தத்தில் தினமும் திரவுபதி நீர் எடுத்து வர, அனைவரும் பெருமாளை பூஜித்து வழிபட்டார்கள். இதனால் அந்தத் தீர்த்தக்குளம் ‘திரவுபதி குளம்’ என்றே அழைக்கப்படுகிறது. மேலும் அங்கு வியாக்ரபாதர் புலி வடிவில் சுற்றித்திரிந்ததால், ‘புலியங்குளம்’ என்ற பெயரும் இந்த தீர்த்தக் குளத்திற்கு உண்டு.
இந்த ஆலயத்தில் கண் நோய் தீர்க்கும் சஞ்சீவியான நந்தியாவட்டை மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் கடுமையான கோடை காலத்திலும் கூட பசுமையாக தோற்றம் அளிக்கும் என்கிறார்கள். இந்த மரம் பெருமாளை வழிபட்ட பஞ்ச பாண்டவர்களால் நடப்பட்டது என்கிறது தல புராணம்.
குடும்ப ஒற்றுமை :
இத்தல இறைவனை வழிபட்ட பஞ்ச பாண்டவர்களுக்கும், நாராயணன் காட்சியளித்து அருளாசி வழங்கினார். அவரிடம் பஞ்ச பாண்டவர்கள், ‘இறைவா! இந்தத் தலத்தில் தாங்கள் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். மேலும் நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் எங்கள் உறவினர்களால் வந்தது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும் படி அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினர். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.
குடும்ப அமைதிக்காகவும், உறவினர் ஒற்றுமைக்காகவும் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இதுதவிர மதனகோபால சுவாமிக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டாலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலோ சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவல்லி தாயாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றினால் நிம்மதியான வாழ்வு அமையும்.
காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும், கோவில் நடை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
பங்குனி உத்திர பெருந்திருவிழா, சித்திரை திருநாள், கோகுலாஷ்டமி, உரியடி திருவிழா, ஆண்டாளுக்கு திருவாடிப்பூர திருவிழா, மார்கழி தரிசனம், வைகுண்ட ஏகாதசி, திருமங்கை வேடுபறி விழா, தீபாவளியை ஒட்டி காரடையான நோன்பு விழா, நரசிம்ம ஜெயந்திவிழா, ஆஞ்சநேயர் கம்பத்திற்கு தினமும் ஒருகால பூஜையும், அனுமன் ஜெயந்தி அன்று வடைமாலை அணிவித்து, சிறப்பு பூஜைகளும், ஆடி 18 அன்று காவிரி தீர்த்த திருமஞ்சனவிழா ராமநவமி விழா உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணன் பிரமனுக்கு 5 இரவுகளில் உபதேசித்த ஆகமம் பாஞ்சராத்ரம், விகனச மகரிஷியால் வகுக்கப்பட்டது வைகானச ஆகமம். மதனகோபால சுவாமி கோவில் வைகானச ஆகம முறையில் தினமும் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய 4 கால பூஜை நடைபெறுகிறது. இதுதவிர மாதாந்திர பஞ்சப்பருவம் எனும் தமிழ் மாதப்பிறப்பு, மாத ஏகாதசிகள், அமாவசை போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
புலியாக மாற சாபம் :
முன்பொரு முறை துர்வாசரிடம் சீடராக இருந்தார் ஒரு முனிவர். ஒரு நாள் கவனக் குறைவாக தனது குருவின் கமண்டல நீரை தட்டிவிட்டு விட்டார் அந்த முனிவர். இதனால் கோபமடைந்த துர்வாசம், அந்த முனிவரை புலியாக மாறி காட்டில் உலவும்படி சாபம் கொடுத்தார். இதனால் பயந்து போன முனிவர், தன்னுடைய சாபம் நீங்க வழி கூறும்படி துர்வாசரிடம் வேண்டினார்.
இதையடுத்து, ‘நீ புலியாக காட்டில் உலவும் வேளையில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனால் தாக்கப்படுவாய். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்’ என்று கூறி அருளினார்.
சாபத்தால் புலியாக மாறிய முனிவர், காட்டில் சுற்றித்திரிந்தார். மேலும் முன்வினை பயனாக, காட்டிற்குள் இருந்த பெருமாளையும் தினமும் பூஜித்து வந்தார்.
இந்த நிலையில் வன வாசம் காரணமாக பஞ்ச பாண்டவர்கள் அந்த வனத்திற்கு வந்தனர். அவர்களும் அங்கிருந்து பெருமாளை வழிபாடு செய்தனர். ஒரு நாள் பூஜைக்காக தண்ணீர் கொண்டுவர அருகில் இருந்த குளத்திற்கு சென்றாள் திரவுபதி. அப்போது அங்கிருந்த புலி ஒன்று அவளைத் துரத்தியது. அதனிடம் இருந்து தப்பித்து இருப்பிடம் திரும்பினாள். அவளது பதற்றத்தைக் கண்ட பீமன், நடந்தது பற்றி விசாரித்தான். அப்போது திரவுபதி தன்னை புலி ஒன்று துரத்தியதைக் கூறினாள்.
விமோசனம் பெற்ற முனிவர் :
அந்த இடத்திற்கு சென்றான் பீமன். அவனைக் கண்டதும் புலி, அவன் மீதும் பாய்ந்தது. ஆனால் தன்னுடைய கதாயுதத்தால் புலியை தாக்கினான் பீமன். கீழே விழுந்த புலி, எழுந்தபோது முனிவராக மாறியிருந்தது. முனிவரை தாக்கிவிட்டோமே என்று பதறிப்போனான் பீமன். முனிவரிடம் மன்னிப்பு வேண்டினான். அவனைக் கனிவுடன் பார்த்த முனிவர், தனது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சென்னார். தனக்கு நன்மை செய்த அவனது வீரம், பன் மடங்கு பெருகும்படி வரம் அருளினார்.
வியாக்ரம் என்றால் புலி என்று பொருள். புலியின் வடிவில் இருந்ததால் அந்த முனிவர் வியாக்ர முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்தத் தலமும் வியாக்ரமபுரம் என்றானது. தமிழில் பெரும்புலிவனம், பெரும்புலியூர் என்பதாகும். பெரும்புலியூர் என்பதே மருவி பெரம்பலூர் என்றானதாகவும் சொல்வார்கள்.
ஆலய அமைப்பு :
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது திருக்கோவில். ராஜகோபுரத்தின் முன்பாக பெரிய தீப ஸ்தம்பம் உள்ளது. இதன் கீழ் திருமாலின் சிறிய திருவடியான அனுமன் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், கருடாழ்வார் சன்னிதிகள் இருக்கின்றன.
அதைக் கடந்து முகப்பு மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து மூலவரான மதனகோபால சுவாமி சன்னிதி காணப்படுகிறது. கருவறை வாசலில் துவாரபாலகர்களான ஜெயன்– விஜயன் வீற்றிருக்கின்றனர். உள்ளே மூலவர் மதனகோபால சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அருகிலேயே மரகதவல்லி தாயார் தனிச்சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அம்பாளை வணங்கினால் திருமணத் தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் மதில் சுவரின் நீளம் 274 அடி, அகலம் 138 அடி ஆகும். கோவிலுக்கு 2 பிரகாரமும், கோவிலுக்கு வெளியே அக்ரகாரத்தில் மற்றொரு பிரகாரமும் உள்ளது. கோவிலின் உட்பிர காரத்தில் தும்பிக்கை ஆழ்வார், வைகுண்ட நாதன், வியாக்ரபாதர், விஷ்ணுதுர்க்கை மற்றும் பன்னிரு ஆழ்வார்கள், விஷ்வக்சேனர் சிலைகளும் அமைந்துள்ளன.
மகாமண்டபத்தின் வெளியே வடபுறம் ஆண்டாள் சன்னிதி, கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர், தென்புறம் உடையவர் சன்னிதி, கல்யாண விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. மரகதவல்லி தாயார் சன்னிதியின் பின் பகுதியில் சக்கரத்தாழ்வார் சன்னிதி இருக்கிறது. இது தவிர லட்சுமி ஹயக்கிரீவர் சன்னிதி, நவநீதகிருஷ்ணன் சன்னிதி, தன்வந்தரி, ஞானசரஸ்வதி சன்னிதி, கணேசர், நாகர் சன்னிதி மற்றும் ராம, சீதா, அனுமன் ஆகியோர் வீற்றிருக்கும் சன்னிதி போன்றவை உள்ளன.
வனவாசத்தின் போது இங்கிருந்து பெருமாளை வழிபட்டனர் பஞ்ச பாண்டவர்கள். அப்போது அருகில் இருந்த தீர்த்தத்தில் தினமும் திரவுபதி நீர் எடுத்து வர, அனைவரும் பெருமாளை பூஜித்து வழிபட்டார்கள். இதனால் அந்தத் தீர்த்தக்குளம் ‘திரவுபதி குளம்’ என்றே அழைக்கப்படுகிறது. மேலும் அங்கு வியாக்ரபாதர் புலி வடிவில் சுற்றித்திரிந்ததால், ‘புலியங்குளம்’ என்ற பெயரும் இந்த தீர்த்தக் குளத்திற்கு உண்டு.
இந்த ஆலயத்தில் கண் நோய் தீர்க்கும் சஞ்சீவியான நந்தியாவட்டை மரம் தல விருட்சமாக உள்ளது. இந்த மரம் கடுமையான கோடை காலத்திலும் கூட பசுமையாக தோற்றம் அளிக்கும் என்கிறார்கள். இந்த மரம் பெருமாளை வழிபட்ட பஞ்ச பாண்டவர்களால் நடப்பட்டது என்கிறது தல புராணம்.
குடும்ப ஒற்றுமை :
இத்தல இறைவனை வழிபட்ட பஞ்ச பாண்டவர்களுக்கும், நாராயணன் காட்சியளித்து அருளாசி வழங்கினார். அவரிடம் பஞ்ச பாண்டவர்கள், ‘இறைவா! இந்தத் தலத்தில் தாங்கள் நிரந்தரமாக தங்கியிருக்க வேண்டும். மேலும் நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் எங்கள் உறவினர்களால் வந்தது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு, உறவினர்களிடையே ஒற்றுமை நிலவும் படி அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினர். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்தார்.
குடும்ப அமைதிக்காகவும், உறவினர் ஒற்றுமைக்காகவும் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இதுதவிர மதனகோபால சுவாமிக்கு துளசி மாலை சூட்டி வழிபட்டாலோ, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலோ சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமைகளில் மரகதவல்லி தாயாருக்கு எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றினால் நிம்மதியான வாழ்வு அமையும்.
காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும், கோவில் நடை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் :
பங்குனி உத்திர பெருந்திருவிழா, சித்திரை திருநாள், கோகுலாஷ்டமி, உரியடி திருவிழா, ஆண்டாளுக்கு திருவாடிப்பூர திருவிழா, மார்கழி தரிசனம், வைகுண்ட ஏகாதசி, திருமங்கை வேடுபறி விழா, தீபாவளியை ஒட்டி காரடையான நோன்பு விழா, நரசிம்ம ஜெயந்திவிழா, ஆஞ்சநேயர் கம்பத்திற்கு தினமும் ஒருகால பூஜையும், அனுமன் ஜெயந்தி அன்று வடைமாலை அணிவித்து, சிறப்பு பூஜைகளும், ஆடி 18 அன்று காவிரி தீர்த்த திருமஞ்சனவிழா ராமநவமி விழா உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகிறது.
ஸ்ரீமந் நாராயணன் பிரமனுக்கு 5 இரவுகளில் உபதேசித்த ஆகமம் பாஞ்சராத்ரம், விகனச மகரிஷியால் வகுக்கப்பட்டது வைகானச ஆகமம். மதனகோபால சுவாமி கோவில் வைகானச ஆகம முறையில் தினமும் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் ஆகிய 4 கால பூஜை நடைபெறுகிறது. இதுதவிர மாதாந்திர பஞ்சப்பருவம் எனும் தமிழ் மாதப்பிறப்பு, மாத ஏகாதசிகள், அமாவசை போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.