ஆன்மிகம்
உடல் நலம் தரும் நடனேஸ்வரர் திருக்கோவில் - திருவாரூர்
ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.
திருவாரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் மருத நிலத்திற்கு உரிய இயல்புகளோடு உள்ளது தலையாலங்காடு என்னும் திருத்தலம். இங்கு நடனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பரின் தேவாரப் பாடல் பெற்ற தலம் இதுவாகும்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் படையெடுத்து வந்து, சோழ மன்னன் ஒருவனோடு இந்த இடத்தில் போரிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் போரில் வெற்றி பெற்ற பாண்டிய மன்னனுக்கு ‘தரையாலக்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பட்டம் வழங்கப்பட்ட தாக புறநானூறு புகழ்கிறது.
இந்த சம்பவத்தை உண்மை என்று பறைசாற்றும் விதமாக, இந்த ஆலயத்தின் அருகில் பாண்டியன் மேடு, பாண்டியன் திடல் போன்றவை இன்னும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். போருக்கு முன்பாக இது ஒரே பெரிய கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு எல்லைக்குள் துண்டு துண்டாக சன்னிதிகள் மதிற் சுற்றுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள புதுக்குடி என்ற திடலில் 100–க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன.
தலையாலங்காடு என்ற பெயரை வைத்துப் பார்க் கும் போது, இந்த பகுதி முன்பு ஆலமரக் காடுகளால் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. அதன்பின்புதான் இந்த ஊரும், ஆலயமும் அமைக் கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட ஆலயத்தின் அருகில் மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று காணப்படுகிறது.
தீர்த்தக்குளம் :
இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கில் ஒன்றும், கிழக் கில் ஒன்றுமாக வளைவுகள் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப் பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
நடனம் புரியும் ஈசன் :
தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர் களுக்கு, சிவபெருமானைக் காட்டிலும் தவத்தில் சிறந்த தாங்களே சிறப்பானவர்கள் என்ற செருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிவபெருமானை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினர். பின்னர் சிவபெருமானின் மீது முயலகன் என்ற அசுரனை ஏவினர். ஆனால் ஈசனோ, அந்த அசுரனை தனது பாதத்தின் கீழ் போட்டு அழுத்தி, அவன் மீது ஏறி நின்று நடனமாடினார்.
அந்த ஈசனே இங்கு அருள்பாலிப்பதால், இத்தல இறைவன் நடனேஸ்வரர் என்றும், ஆடவல்லநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் சன்னிதி முன்பாக உள்ள மகா மண்டபத்தில், முயலகன் மீது சிவன் காலூன்றி ஆடும் நடராஜ சபை இதனை உறுதி செய்கிறது. இசை, நடனத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், இங்கு வந்து நடராஜனை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சுவாமி சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வலது புறத்தில் தனிச் சன்னிதியில் விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் பிரசன்ன விநாயகர், அதையடுத்து வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
வடக்குப் பகுதிக்கு வலமாக வந்தால், அங்கே 10 கரங்களுடன் தசபுஜ காளிதேவியின் சன்னிதி அமைந் திருக்கிறது. இந்த காளிதேவியை வழிபட்டுதான் போரில் பாண்டிய மன்னன் வென்றதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகு காலத்தில், இந்த காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தல மூலவர் விமானத்தின் தோற்றமே வித்தியாசமாக காட்சி தருகிறது. இதில் இருந்து ஒரு தை அமாவாசை நாளில், அப்பருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. அந்த காட்சியும் விமானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விமான மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.
திருநாவுக்கரசர் என்று இறைவனால் அழைக்கப்பட்ட அப்பர் பெருமான், ‘இத்தனை நாளும் இத்தலத்தை வணங்காமல் காலம் கடத்தி விட்டேனே’ என்று கூறி 10 பதிகங்களைப் பாடியிருப்பது சிறப்பானதாகும். அதில் முதல் பதிகம் இது.
‘தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை
ஆதிரைநாள் ஆதரித்த அம்மான்தன்னை
முண்டத்தின் முளைத்து எழுந்த தீயானானை
மூவுருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே’.
இந்தக் கோவிலில் லட்சுமி திருவுருவம் இல்லை. ஆனால் சிவன் சன்னிதி மண்டபத்தில் வடபுறத்தில் சரஸ்வதிக்கு, ஜோதியாக காட்சி தந்த சிலாரூபம் உள்ளது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது. அங்கிருந்து சற்று தூரம் நடந்தால், தெற்கு வாசலுக்கு எதிரே நந்தி மண்டபம் உள்ளது. அதன் அருகில் தனிச் சன்னிதியில் அம்பாள் ‘பாலாம்பிகை’ என்ற பெயரில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பழங்காலத்தில் இந்த அம்மனுக்கு ‘திருமடந்தை அம்மன்’ என்ற பெயர் இருந்திருக்கிறது.
அம்பாள் சன்னிதிக்கு அருகில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கிறார். சுவாமி– அம்பாளுக்கு இடையில் திருநள்ளாறு போல் கிழக்கு பார்த்தபடி இவர் இருப்பதால், இத்தல சனீஸ்வரர் தோஷ நிவர்த்தி செய்ய ஏற்றவராக, அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் படையெடுத்து வந்து, சோழ மன்னன் ஒருவனோடு இந்த இடத்தில் போரிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் போரில் வெற்றி பெற்ற பாண்டிய மன்னனுக்கு ‘தரையாலக்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பட்டம் வழங்கப்பட்ட தாக புறநானூறு புகழ்கிறது.
இந்த சம்பவத்தை உண்மை என்று பறைசாற்றும் விதமாக, இந்த ஆலயத்தின் அருகில் பாண்டியன் மேடு, பாண்டியன் திடல் போன்றவை இன்னும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். போருக்கு முன்பாக இது ஒரே பெரிய கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு எல்லைக்குள் துண்டு துண்டாக சன்னிதிகள் மதிற் சுற்றுகள் உள்ளன. இந்த ஆலயத்தின் அருகில் உள்ள புதுக்குடி என்ற திடலில் 100–க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன.
தலையாலங்காடு என்ற பெயரை வைத்துப் பார்க் கும் போது, இந்த பகுதி முன்பு ஆலமரக் காடுகளால் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. அதன்பின்புதான் இந்த ஊரும், ஆலயமும் அமைக் கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட ஆலயத்தின் அருகில் மிகவும் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று காணப்படுகிறது.
தீர்த்தக்குளம் :
இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கில் ஒன்றும், கிழக் கில் ஒன்றுமாக வளைவுகள் மட்டுமே உள்ளது. கோவிலுக்கு வெளியே கீழ்புறத்தில் ‘சங்குதீர்த்தம்’ என்ற பெயரில் திருக்குளம் ஒன்று இருக்கிறது. இந்த குளத்தில் வெளியில் இருந்து நீர்வரத்து இல்லை. ஊற்று நீர்தான் பெருக்கெடுத்து குளத்தை நிரப்புகிறது. இந்த தீர்த்தம், அந்த மண்ணுக்கே உரிய வேதி, மருந்துப் பொருட்களோடு கலந்து இருப்பதால், வெண்குஷ்டம் எனப்படும் தொழு நோய் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் பெற்றதாக விளங்குவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திருக்குளத்தில் நீராடி விட்டு, ஆலயத்திற்குள் உள்ள சுவாமி, அம்பாளுக்கு 5 நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு, அபிஷேக விபூதி மற்றும் மூலிகை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை எடுத்துச் சென்று 48 நாட்களுக்கு விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு, மூலிகை மருந்தினை சாப்பிட வேண்டும். நோய் தீர்ந்ததும் மீண்டும் ஆலயத்திற்கு வந்து சங்கு தீர்த்தத்தில் நீராடி, சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து, புதுத் துணிகள் சாத்தி வழிபட வேண்டும். இந்த திருக்குளத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நீராடினால் கண்கண்ட பலன் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
நடனம் புரியும் ஈசன் :
தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர் களுக்கு, சிவபெருமானைக் காட்டிலும் தவத்தில் சிறந்த தாங்களே சிறப்பானவர்கள் என்ற செருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சிவபெருமானை மதிக்காமல் நடந்து கொள்ளத் தொடங்கினர். பின்னர் சிவபெருமானின் மீது முயலகன் என்ற அசுரனை ஏவினர். ஆனால் ஈசனோ, அந்த அசுரனை தனது பாதத்தின் கீழ் போட்டு அழுத்தி, அவன் மீது ஏறி நின்று நடனமாடினார்.
அந்த ஈசனே இங்கு அருள்பாலிப்பதால், இத்தல இறைவன் நடனேஸ்வரர் என்றும், ஆடவல்லநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானின் சன்னிதி முன்பாக உள்ள மகா மண்டபத்தில், முயலகன் மீது சிவன் காலூன்றி ஆடும் நடராஜ சபை இதனை உறுதி செய்கிறது. இசை, நடனத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், இங்கு வந்து நடராஜனை வணங்கினால், அவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சுவாமி சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வலது புறத்தில் தனிச் சன்னிதியில் விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் பிரசன்ன விநாயகர், அதையடுத்து வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
வடக்குப் பகுதிக்கு வலமாக வந்தால், அங்கே 10 கரங்களுடன் தசபுஜ காளிதேவியின் சன்னிதி அமைந் திருக்கிறது. இந்த காளிதேவியை வழிபட்டுதான் போரில் பாண்டிய மன்னன் வென்றதாக கூறப்படுகிறது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் வரும் ராகு காலத்தில், இந்த காளிதேவியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தைப் பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தல மூலவர் விமானத்தின் தோற்றமே வித்தியாசமாக காட்சி தருகிறது. இதில் இருந்து ஒரு தை அமாவாசை நாளில், அப்பருக்கு இறைவன் காட்சி கொடுத்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. அந்த காட்சியும் விமானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விமான மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.
திருநாவுக்கரசர் என்று இறைவனால் அழைக்கப்பட்ட அப்பர் பெருமான், ‘இத்தனை நாளும் இத்தலத்தை வணங்காமல் காலம் கடத்தி விட்டேனே’ என்று கூறி 10 பதிகங்களைப் பாடியிருப்பது சிறப்பானதாகும். அதில் முதல் பதிகம் இது.
‘தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை
ஆதிரைநாள் ஆதரித்த அம்மான்தன்னை
முண்டத்தின் முளைத்து எழுந்த தீயானானை
மூவுருவத்து ஓருருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கினேனே’.
இந்தக் கோவிலில் லட்சுமி திருவுருவம் இல்லை. ஆனால் சிவன் சன்னிதி மண்டபத்தில் வடபுறத்தில் சரஸ்வதிக்கு, ஜோதியாக காட்சி தந்த சிலாரூபம் உள்ளது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கே வழிபாடு நடத்தப்படுகிறது. அங்கிருந்து சற்று தூரம் நடந்தால், தெற்கு வாசலுக்கு எதிரே நந்தி மண்டபம் உள்ளது. அதன் அருகில் தனிச் சன்னிதியில் அம்பாள் ‘பாலாம்பிகை’ என்ற பெயரில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பழங்காலத்தில் இந்த அம்மனுக்கு ‘திருமடந்தை அம்மன்’ என்ற பெயர் இருந்திருக்கிறது.
அம்பாள் சன்னிதிக்கு அருகில் கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கிறார். சுவாமி– அம்பாளுக்கு இடையில் திருநள்ளாறு போல் கிழக்கு பார்த்தபடி இவர் இருப்பதால், இத்தல சனீஸ்வரர் தோஷ நிவர்த்தி செய்ய ஏற்றவராக, அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் பங்குனி மாத கடைசி இரண்டு நாட்களும், சித்திரை முதல் இரண்டு நாட்களும், இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுந்து, சூரிய பூஜை நடக்கிறது.