ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அன்னையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பேராலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து மாலை 6.30 மணிக்கு கொடியை ஏற்றினார். அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரியவிடப்பட்டன. பின்னர் பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதையடுத்து வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.
அதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்பவனியும் நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பேராலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து மாலை 6.30 மணிக்கு கொடியை ஏற்றினார். அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் எரியவிடப்பட்டன. பின்னர் பக்தர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதையடுத்து வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.
அதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் தினமும் நடைபெறுகின்றன. ஆண்டு திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்பவனியும் நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.