ஸ்லோகங்கள்
கமலாம்பிகை

விரும்பியதை அருளும் கமலாம்பிகை ஸ்தோத்திரம்

Published On 2022-05-20 06:05 GMT   |   Update On 2022-05-20 06:05 GMT
உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.
யோகா னந்த கரீம் ஜகத்ஸுககரீம்
யோகீந்த்ர சித்தாலயாம்
ஏகாமீச ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
ஏகாந்த ஸஞ்சாரிணீம்
வாகீசாம், விதி, விஷ்ணு, சம்பு, வரதாம்
விச்வேச்வரீம் வைணிகீம்
வந்தே ஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

பொருள் : தியான யோகத்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவள், உலகிற்குச் சுகத்தை அளிப்பவள், யோகிகளின் மனதைக் கோவிலாகக் கொண்டவள், அத்விதீயாக இருப்பவள், பரமசிவனுக்குச் சுகத்தை அளிப்பவள், பிரளய காலத்தில் தனித்து நிற்பவள், வாக்கிற்கு ஈஸ்வரி. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு வரங்களை அளிப்பவள், உலகிற்கெல்லாம் தலைவி, வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவள், விரும்பியதை அருளும் மங்களகரமான கமலாம்பிகையைத் தினமும் வணங்குகிறேன்.
Tags:    

Similar News