ஸ்லோகங்கள்
விநாயகர்

சங்கடஹர சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய கணபதி துதி

Published On 2022-03-21 06:38 GMT   |   Update On 2022-03-21 06:38 GMT
விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

கணபதி என்றிடக் கவலை தீருமே

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

மனதிற் சலனமில்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும் பொழுது நின் மவுன

நிலை வந் திடநீ செயல் வேண்டும்

கனக்குஞ் செல்வம் நூறு வயது

இவையும் தரநீ கடவாய்…
Tags:    

Similar News