ஆன்மிகம்
பரமேஸ்வரி

தெய்வ கடாட்சம் அருளும் பரமேஸ்வரி மூல மந்திரம்

Published On 2019-08-27 08:00 GMT   |   Update On 2019-08-27 08:00 GMT
பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது.
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம்
ஸ்ரீம் பரமேஸ்வர்யை நமஹ

பரமேஸ்வரி அம்மனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூல மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் பரமேஸ்வரி தேவியை மனதில் நினைத்தவாறே 27 முறை உரு துதித்து வழிபடுவது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் படத்திற்கு முன்பு நெய் தீபம் ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை துதித்து வணங்குவதால் உங்கள் வாழ்வில் துரதிஷ்டங்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஒவ்வொன்றாக கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் சக வியாபாரிகளின் நேரடி மற்றும் மறைமுக சதிகளை தவிடுபொடியாக்கும். மேலும் அந்த தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வீட்டில் தெய்வ கடாட்சம் உண்டாகும்.
Tags:    

Similar News