ஆன்மிகம்
நாராயணா

சத்ருபயம் நீக்கும் ஸ்லோகம்

Published On 2019-07-31 08:20 GMT   |   Update On 2019-07-31 08:20 GMT
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சத்ருபயம் நீங்கும். நீர்வளம், நிலவளம் பெருகி வளமான வாழ்வு கிட்டும்.
மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ர தரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாபதிம் பஜே

பொதுப் பொருள்: சாட்சாத் பரம்பொருளாகிய நாராயணனே தங்களுக்கு நமஸ்காரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட தாங்கள் தசாவதாரம் எடுத்து அருளினீர்கள். அதில் முதல் அவதாரம் சங்கு சக்ரம் தாங்கி சர்வாபரணங்களும் தரித்து பூமிதேவி, நீலாதேவி சமேதராய் அருட்காட்சி தரும் மத்ஸ்யாவதாரம். வேதங்களைக் காத்தது போல் எங்களையும் காத்தருள வேண்டும்.
Tags:    

Similar News