ஆன்மிகம்

பணம் வரவு தரும் விநாயகர் துதி

Published On 2019-03-11 08:27 GMT   |   Update On 2019-03-11 08:27 GMT
பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.
கணேசர் துதி ஓம் செல்வ விநாயகனே சரணம்
சரணம் ஓம் சக்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் சித்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் அரசமர விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஆதி நந்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெள்ளெருக்கு விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஸ்ரீசக்ர விநாயகனே சரணம் சரணம்
ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
ஓம் ஷண்முக விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெற்றி விநாயகனே சரணம் சரணம்
ஓம் வக்ரதுண்ட விநாயகனே சரணம் சரணம்
ஓம் சுந்தர விநாயகனே சரணம் சரணம்
ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
ஓம் வெங்கடேச விநாயகனே சரணம் சரணம்
ஓம் பிரசன்ன விநாயகனே சரணம் சரணம்
ஓம் ரத்ன விநாயகனே சரணம் சரணம்
ஓம் கற்பக விநாயகனே சரணம் சரணம்
ஓம் லக்ஷ்மி விநாயகனே சரணம் சரணம்
ஓம் பம்பா விநாயகனே சரணம் சரணம்
ஓம் நவசக்தி விநாயகனே சரணம் சரணம்
ஓம் வினைதீர்த்த விநாயகனே சரணம் சரணம்

விண்ணின் நாயகனாகிய கணேசர் எனப்படும் விநாயகர் பெருமானுக்குரிய துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு வெளியில் செல்வதற்கு முன்பு 3 முறை துதித்து விட்டு செல்வது நல்லது. செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று, விநாயகருக்கு தீபமேற்றி இந்த துதியை 27 முறை படிப்பதால் உங்களின் மனக்கவலைகள் தீரும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் முடிவிற்கு வரும். பணம் சம்பந்தமான விடயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். வளமை பெருகும். மன அமைதி உண்டாகும்.

மனித வாழ்க்கையில் பணம் என்பது ஒரு இன்றியமையாத இடத்தை பெறுகிறது. மனிதர்களின் மனக்கவலைகள் 90 சதவீதம் இந்த பணத்தை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. இப்படி வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலானோருக்கு ஏதேனும் தடை, தாமதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் போக்கி பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.
Tags:    

Similar News