ஆன்மிகம்

நாம் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட ஸ்லோகம்

Published On 2019-02-26 07:11 GMT   |   Update On 2019-02-26 07:11 GMT
இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும்.
மனோவ்ருந்திரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா
ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி
சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்
ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!

- ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி

பொதுப்பொருள்: அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். மஹேஸ்வரி என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்.

(இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும். அப்படியே அறியாமல் செய்துவிட்டாலும், அந்தப் பாவங்களும் அன்னை புவனேஸ்வரியால் மன்னிக்கப்படும்)
Tags:    

Similar News