ஆன்மிகம்

சாபங்களை போக்கும் பிரதோஷ கால சிவ மந்திரம்

Published On 2019-01-03 06:56 GMT   |   Update On 2019-01-03 06:56 GMT
பிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சிவன் முன்னிலையில் கூறி வழிபட, நம்மை அறியாமல் செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
இன்று சிறப்பு வாய்ந்த மார்கழி மாத பிரதோஷம். சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல்லையும், சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்களையும் சாற்றி சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை 9 அல்லது 11 முறை கூறி வழிபட, நம்மை அறியாமல் பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ
Tags:    

Similar News