ஆன்மிகம்

சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்

Published On 2018-06-27 05:12 GMT   |   Update On 2018-06-27 05:12 GMT
சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்.
நவக்கிரகங்களின் வழிபாடு அவசியமானது. நவக்கிரகங்களின் தோஷங்களைப் போக்கும் ஆற்றல் பைரவருக்கும் உண்டு. நவக்கிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பைரவர் பிராண தேவதையாக இருக்கிறார்.

சூரியனின் பிராண தேவதை சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர், செவ்வாய் கிரகத்தின் பிராண தேவதை சண்ட பைரவர், புதனின் பிராண தேவதை உன்மத்த பைரவர், குரு பகவானுக்கு அசிதாங்க பைரவரும், சுக்ரனுக்கு ருரு பைரவரும், சனி பகவானுக்கு குரோதன பைரவரும், ராகுவுக்கு சம்ஹார பைரவரும், கேதுவுக்கு பீஷண பைரவரும் பிராண தேவதைகளாக இருக்கிறார்கள்.

சூரிய திசை யாருக்கெல்லாம் நடக்கிறதோ, அவர்கள் பைரவரின் சன்னிதியில் நின்று சூரியனின் பிராண தேவதையான சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரத்தை 9 முறை உச்சரிப்பது நன்மை தரும்

‘ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்’

என்ற இந்த மந்திரத்தை சூரிய திசை முடியும் வரை கூறி வந்தால் நடப்பவையாவும் நன்மையாக முடியும்.
Tags:    

Similar News