ஆன்மிகம்

ராகு - கேது தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களும் பெருக ஸ்லோகம்

Published On 2018-04-24 08:19 GMT   |   Update On 2018-04-24 08:19 GMT
ராகு - கேது தோஷத்தால் திருமண தடைப்படுபவர்கள் அனைத்து நலன்களும் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்
ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம்
பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹமஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம்
நவகிரக ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்:

பாதி (மனித) சரீரமுள்ளவரே, மகா பலசாலியானவரே, சந்திர-சூரியனையே மறைப்பவரே, ஸிம்ஹிகையின் கர்ப்பத்தில் பிறந்தவரே, ராகு பகவானே நமஸ்காரம். பலாச மலர் போன்றவரே, நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் தலைவரானவரே, கோபம் மிக்க உருவம் கொண்டவரே, அநீதிக்கு அச்சமூட்டுபவரே, கேது பகவானே, நமஸ்காரம்.

Tags:    

Similar News