ஆன்மிகம்

கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க ஸ்லோகம்

Published On 2018-04-23 07:31 GMT   |   Update On 2018-04-23 07:31 GMT
கிரக தோஷங்கள் நீங்கி நவகிரகங்களின் திருவருள் கிடைக்க தினமும் இத்துதியை பாராயணம் செய்தால் நவகிரகங்களின் திருவருள் பரிபூரணமாக கிட்டும்.
ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர:
சந்த்ரோ யஸோ நிர்மலம்
பூதிம் பூமிஸுத: ஸுதாம்ஸுதனய:
ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம்
கான்ய: கோமளவாக்விலாஸமதுலம்
மந்தோமுதம் ஸர்வதா:
ராஹுர் பாஹுபலம் விரோதஸமனம்
கேது: குலஸ்யோன்னதிம்

- நவகிரக ஸ்லோகம்

பொதுப் பொருள்:

எல்லோருக்கும் ஆரோக்கியத்தை அருளும் சூரிய பகவானே, கீர்த்தியைக் குறைவின்றி வழங்கும் சந்திரனே, ஐஸ்வர்யங்களை  அள்ளித் தரும் அங்காரகனே, நல்ல புத்தியை நல்கும் புதன் பகவானே, நல்ல மதிப்பை அருளும் குரு பகவானே, பிறர் போற்றும் வண்ணம் அழகிய  பேச்சுத் திறமையை வழங்கும் சுக்கிரனே, சுகத்தைக் குறைவின்றி தரும் சனிபகவானே, நல்ல உடல் பலத்தையும் விரோதிகள் மேல் வெற்றியும்  நல்கும் ராகுவே, குல அபிவிருத்தி அருளும் கேதுவே, உங்கள் அனைவருக்கும் நமஸ்காரம். நவகிரகங்களும் நற்பேறுகளை அளிப்பீர்களாக.

Tags:    

Similar News