ஆன்மிகம்

இன்று சொல்ல வேண்டிய பங்குனி உத்திரப்பாடல்

Published On 2018-03-30 06:00 GMT   |   Update On 2018-03-30 06:00 GMT
பங்குனி உத்திர தினமான இன்று முருகனுக்கு உகந்த இந்த பாடலை பாடி வழிபாடு செய்தால் பிறவிப்பிணி தீர்க்கும்.
பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத்தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு ‘பழனி’ என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசனம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம்.

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!

என்று பங்குனி உத்திர நாளில் பாடி, முருகனின் அருள் பெறலாம்.
Tags:    

Similar News