ஆன்மிகம்

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்

Published On 2018-03-28 02:47 GMT   |   Update On 2018-03-28 02:47 GMT
தேய்பிறை அஷ்டமியன்று ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இந்த மூல மந்திரத்தை சொல்லி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபாடு செய்யலாம்.
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வே ஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

சனியின் பிடியில் இருக்கும் கன்னி, துலாம், விருச்சிகம், மீனம், மேஷம், கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்; அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி, அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். 33 என்பது குபேரனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழங்கியது ஆகும்.

ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.
Tags:    

Similar News