ஆன்மிகம்

பாம்பன் சுவாமிகள் அருளிய முருகன் ஸ்லோகம்

Published On 2018-03-22 06:18 GMT   |   Update On 2018-03-22 06:18 GMT
பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை தினமும் அல்லது கிருத்திகை தினங்களில் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.

- பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்

பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.

பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை கிருத்திகை தினங்களில் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.
Tags:    

Similar News