ஆன்மிகம்

வெற்றி தரும் விநாயகர் சுலோகங்கள்

Published On 2018-03-08 07:34 GMT   |   Update On 2018-03-08 07:34 GMT
தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.சிறப்பு வாய்ந்த விநாயகரை தொழுவதற்காக, நிறைய சுலோகங்கள் இருக்கின்றன.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை
முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்
கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி
போற்றுகின்றேனே.

விநாயகர் காயத்ரி

‘ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்’
‘வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம்
நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய
நமஹ’
Tags:    

Similar News