ஆன்மிகம்
கல்யாண வெங்கடேச பெருமாள்

திருமண வாழ்க்கை அருளும் கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு விரத வழிபாடு

Published On 2020-09-09 08:41 GMT   |   Update On 2020-09-09 08:41 GMT
கல்யாண வெங்கடேச பெருமானுக்கு விரதம் இருந்து நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைத்தேங்காய் வைத்து வழிபட்டு கோயிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர். திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் “கல்யாண வெங்கடேசப் பெருமாள்’ எனப்படுகிறார். பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னதிகள் உள்ளன. விரதம் இருந்து நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைத்தேங்காய் வைத்து வழிபட்டு  கோயிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.

இருப்பிடம்: வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள நாயுடு மங்கலம்  கூட்டுரோட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.
Tags:    

Similar News