ஆன்மிகம்
விஷ்ணு

நிர்ஜலா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது எப்படி?

Published On 2020-07-01 05:01 GMT   |   Update On 2020-07-01 05:01 GMT
இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம்.
நம்மில் பலருக்கும் மாதமிருமுறை வரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்வதில் விருப்பம் இருக்கலாம்.

அதிகாலையில் எழுந்து நீராடி அந்த வாசுதேவனை வணங்க வேண்டும். நாள் முழுவதும், `ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்று உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இந்த நாளில் முடிந்த அளவுக்கு தான தருமங்கள் செய்ய வேண்டும். இன்று தானம் செய்யும் செல்வம் பல மடங்காகப் பெருகி நம்மிடம் வந்து சேரும். அந்த நாளின் இரவிலும் இறைச்சிந்தனையிலேயே நிறைந்திருக்க வேண்டும். மறுநாள் துவாதசி திதி தொடங்கும் வேளையில் பகவான் விஷ்ணுவை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி இந்த விரதத்தை முடிக்கலாம்.

பீமசேனன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ள முடிவு செய்தான். அவ்வாறே நிர்ஜலா ஏகாதசி விரதத்தையும் முடித்தான். அதனால் அவனுக்குப் புண்ணிய பலன்கள் கிடைத்தன. பீமனே உணவை விட்டு உபவாசித்த ஏகாதசி என்பதால் அந்த ஏகாதசிக்கு பீம ஏகாதசி என்றும் பாண்டவ ஏகாதசி என்றும் பெயர் உண்டானது.

இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம். நாள் முழுவதும் நாராயண நாமமோ அல்லது ராம நாமமோ சொல்லி ஜபம் செய்யலாம். இதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். 
Tags:    

Similar News