ஆன்மிகம்
லட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து பிரதட்சண வழிபாடு
விரதம் இருந்து பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து, ‘ஓம் நமோ நாராயணா’ என்று மனம் உருகி இந்த பிரார்த்தனையை செய்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் எத்தனையோ சிறப்புகளைக்கொண்டது. அந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை விதவிதமான வழிபாடுகள் நடத்தப்பட்டன. அவற்றில் பல வழிபாடுகள் கால ஓட்டத்தில் மறைந்து விட்டன. அந்த வழிபாடுகளில் சில தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளன. அதில் விரதம் இருந்து ஈரத்துணியுடன் பரிக்கல் ஆலய முதல் பிரகாரத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் வழிபாடு புத்துயிர் பெற்றுள்ளது.
பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து, ‘ஓம் நமோ நாராயணா’ என்று மனம் உருகி இந்த பிரார்த்தனையை செய்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ, அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார். இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.
நரசிம்மருக்கு உகந்த சுவாதி நட்சத்திர நாளில் இந்த விரத வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.
பரிக்கல் லட்சுமி நரசிம்மரை நினைத்து, ‘ஓம் நமோ நாராயணா’ என்று மனம் உருகி இந்த பிரார்த்தனையை செய்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். அவர்கள் என்ன வேண்டுதல் வைக்கிறார்களோ, அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார். இந்த வழிபாட்டுக்கு உதவும் வகையில் பரிக்கல் ஆலயம் அருகில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் உள்ளன. இரவில் அங்கு தங்கி விட்டு அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஈரத்துணியுடன் 48 தடவை ஆலய பிரதட்சணம் செய்யலாம்.
நரசிம்மருக்கு உகந்த சுவாதி நட்சத்திர நாளில் இந்த விரத வழிபாட்டை செய்வது மிகவும் நல்லது.