ஆன்மிகம்
அறுபடை வீடு முருகன்

அறுபடை வீடு முருகன் விரதமும்- பலன்களும்

Published On 2020-03-13 08:02 GMT   |   Update On 2020-03-13 08:02 GMT
அறுபடை வீடு முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளும், கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

* திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): விரதம் இருந்து இங்கு முருகப்பெருமானை, கடலில் நீராடி, பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

* திரு ஆவினன்குடி (பழனி): விரதம் இருந்து ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை வழிபட்டால், தெளிந்த ஞானம் கிடைக்கும்.

* சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

* திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை விரதம் இருந்து வழிபட்டால், மனதிலிருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

* பழமுதிர்ச்சோலை : விரதம் இருந்து இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் நீராடுதல் மிகவும் சிறப்பு.
Tags:    

Similar News