ஆன்மிகம்
முருகன் வள்ளி தெய்வானையுடன்

கிருத்திகை விரதம் இருந்தால் முக்தி பெறலாம்

Published On 2020-02-28 06:44 GMT   |   Update On 2020-02-28 06:44 GMT
மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபாட்டால் முக்தி கிடைக்கும்.
கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதைக் குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது.

முருகன் பிறந்தது விசாகம் நட்சத்திரம் என்றாலும் முருகனை சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாதங்களில் வரும் கிருத்திகையைத் தாண்டி தை கிருத்திகை, கார்த்தி கிருத்திகை கொண்டாடப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்மக்கள் கொண்டாடுவது ஆடி கிருத்திகைதான்.

அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு வழி பாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் வெகு சிறப்பாக நடைபெறும்.பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டார்கள். பார்வதி தேவி அகிலாண்டேஸ்வரிடம் அந்த அசுரனை வதம் செய்ய வேண்டும் என்று வேண்டினாள்.

சிவபெருமான், நெருப்பு  வடிவம் கொண்டு தவம் செய்துகொண்டிருந்த காலம் அது. எனினும் பார்வதி தேவியின் அழைப்பில் தன்னுடைய தவத்தைக் கலைத்தார்.பார்வதி தேவி கேட்டதற்கிணங்க அசுரனை வதம் செய்ய வேண்டி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன.  

அந்தப் பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் உருவாயின. அந்த  ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகைப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News