ஆன்மிகம்
முருகன்

வரும் 8-ம் தேதி கவலைகளை அகற்றும் தைப்பூசம்

Published On 2020-02-05 06:11 GMT   |   Update On 2020-02-05 06:11 GMT
தைப்பூசம் அன்று விரதம் இருந்து சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.
தை மாதத்தின் பூச நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி திதியும் இணைந்த நாள் தைப்பூசம் ஆகும். அந்த நாள் 8-2-2020 (சனிக்கிழமை) வருகிறது. முருகன் வழிபாட்டிற்கு தைப்பூசம் உகந்த நாள் ஆகும். அன்றைய தினம் விரதம் இருந்து சுப்ரமணிய புஜங்கம், சகஸ்ர நாமம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் கஷ்டங்கள் நீங்கி, வாழ்வில் வளம் சேரும்.

ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைவனை உணர்ந்து முக்தி அடையலாம் என்பதால், அன்றைய தினம் ஜீவ சமாதி அடைந்த மகான்களை ஜோதி வடிவில் வழிபடுவதும் சிறப்பு.
Tags:    

Similar News