ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட பதவி கிடைக்கும் வைகுண்ட ஏகாதசி: விரதம் அனுஷ்டிக்கும் முறை

Published On 2020-01-06 03:32 GMT   |   Update On 2020-01-06 03:32 GMT
வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று அதாவது நாளை (ஞாயிற்றுக் கிழமை) பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும். ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை சேர்த்து பல்லில் படாமல் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!! என மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு விட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

Tags:    

Similar News