ஆன்மிகம்
வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாமா?
பெண்களின் மாங்கல்யம் நிலைக்க கடைபிடிக்கப்படும் வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டித்தால் பலன் கிடைக்குமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
வரலட்சுமி விரதத்தை கூட்டாக சேர்ந்து அனுஷ்டிக்கலாம். திருமகளை ஆஷாடம் என்கிற ஆடி மாதத்திலும், பாத்ரபதம் என்கிற ஆவணி மாதத்திலும், வளர்பிறை வெள்ளியன்று விரதமிருந்து பூஜிக்கலாம். இந்த நியதியை தென்னாட்டவர் பலரும் குடும்பப் பாரம்பரிய வழக்கமாகவே செய்து வருகின்றனர்.
தற்சமயம் நாம் பல நாடுகளிலும் நகரங்களிலும் கூடி வாழ்வதாலும் ஆண், பெண் இருவருக்குமே பணிகள் அதிகமாகி விட்டதாலும் வீடுகளிலோ ஆலயங்களிலோ ஒன்றுகூடி ஒன்றாகவே சிலர் நிகழ்த்தி வருகின்றனர். சூரியன் மலை வாயில் இறங்கும் நேரம் அதாவது, சந்தியா காலம் என்கிற மாலை நேரத்தில் பூஜை செய்வது மிகவும் உயர்வை கொடுக்கும்.
தற்சமயம் நாம் பல நாடுகளிலும் நகரங்களிலும் கூடி வாழ்வதாலும் ஆண், பெண் இருவருக்குமே பணிகள் அதிகமாகி விட்டதாலும் வீடுகளிலோ ஆலயங்களிலோ ஒன்றுகூடி ஒன்றாகவே சிலர் நிகழ்த்தி வருகின்றனர். சூரியன் மலை வாயில் இறங்கும் நேரம் அதாவது, சந்தியா காலம் என்கிற மாலை நேரத்தில் பூஜை செய்வது மிகவும் உயர்வை கொடுக்கும்.