ஆன்மிகம்

இந்து சமயத்தில் விரதத்தின் முக்கியத்துவம்

Published On 2018-06-29 13:49 IST   |   Update On 2018-06-29 13:49:00 IST
இந்து சமயத்தில் பல்வேறு விரதங்கள் பின்பற்றப்படுகின்றன. அந்த விரதங்களை எந்த முறையில் கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விரதங்களை மெற்கொள்பவர், காலையில் எழுந்து தம் கடைமைகளை முடித்து, முன்னாளும் உபவாசியராய், குரு, சுக்ரர், அஸ்தம் உதயம் மூடங்களாகிய காலங்களையும், மலமாஸங்களையும் சிங்க மகா அத்தமனங்களையும், விஷ கண்ட முதலிய ஷட்கண்டங்களையும், தீய நாட்டங்களையும், தவிர்த்துக் குற்றமில்லாச் சுப தினமாகிய நாள்களில் விரதங்களைத் தொடங்கல் வேண்டும்.

சுமங்கலிகள் புருஷன் கட்டளையின்படி விரதங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அல்லாத நங்கை கணவனை இழக்கிறதேயன்றி நரகத்தையும் அடைகிறாள்.

விரதம் தொடங்கும் நாளுக்கு முதனாள் முழுகி ஒரு பொழுதுண்டு மறுநாள் ஸ்நானம் செய்து தானாதிகள் செய்து சங்கல்பஞ் செய்து ஜபம், பூஜை முதலிய முடித்து வேதியரைப் பூசித்துத் தட்சணை முதலியவை யதாசக்தி அளித்து நியமாகார முதலிய உள்ளவராய் மாம்சாதிகள், தாம்பூலம் அபயங்கனம், தஜஸ்வலையர், சண்டாளர், பாபிகளைத் பாபிகளைத் தீண்டாது, பெண் போகம் நீத்தல் வேண்டும்.

விரத பங்கம் நேரிடின் மூன்று நாள் ஆகாரமின்றியிருத்தல் வேண்டும். 
Tags:    

Similar News