ஆன்மிகம்

விரதம் இருக்கும் போது அணிய வேண்டிய ஆடை

Published On 2017-05-13 06:56 GMT   |   Update On 2017-05-13 06:56 GMT
வேண்டுதல்கள் நிறைவேற பக்தர்கள் விரதத்தை கடைபிடிக்கிறார்கள். அந்த வகையில் விரதம் இருக்கும் போது எந்த நிற உடையை அணி வேண்டும் என்பதை பார்க்கலாம்.
திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். சுமங்கலி பெண்கள் வீட்டிற்று வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள்.

இங்ஙனம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்புகிறார்கள். நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தை பார்க்கும் பொருள்களில் உபயோகப்படுத்துவது வழக்கம். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும்.
Tags:    

Similar News