ஆன்மிகம்

பக்தர்கள் கேட்கும் வரங்களை அருளும் கவுரி விரதம்

Published On 2017-05-03 05:38 GMT   |   Update On 2017-05-03 05:38 GMT
பார்வதி தேவியை ‘கவுரி’ என்றும் அழைப்பார்கள். ‘கேதார கவுரி விரதம்’ என்று ஒன்று இருக்கிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடித்தால் பக்தர்களில் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றுவாள்.
சத்யவீர கவுரி :

இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். பலரும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவதிப்படுவதையும் நாம் காண்கிறோம். அதற்கு நல்ல மனமும் அவசியமானது. அத்தகைய மனப்பாங்கை அருள்பவளே ‘சத்யவீர கவுரி’. இந்த தேவியுடன் வீர கணபதி அருள்பாலிப்பார். இந்த கவுரிக்குரிய நாள், ஆடி மாத வளர்பிறை திரயோதசி ஆகும். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் என்கின்றனர்.



வரதான கவுரி :

பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தானமாக அளிப்பதால் இவள் ‘வரதான கவுரி’ என்று போற்றப்படுகிறாள். இந்த அன்னை கொடை வள்ளல்களின் கரத்தில் குடியிருப்பவள். திருவையாற்றில் விளங்கும் அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி; வடமொழியில் தர்மசம்வர்த்தினி. காஞ்சியிலும் அறம் வளர்த்த நாயகியைத் தரிசிக்கலாம். புரட்டாசி வளர்பிறை திருதியை நாளில், வரதான கவுரியை வழிபடுவது சிறப்பு.

Tags:    

Similar News