ஆன்மிகம்

வாழ்வில் திருப்பம் தரும் ஆனி ஏகாதசி விரதம்

Published On 2016-10-22 02:44 GMT   |   Update On 2016-10-22 02:44 GMT
ஆனி ஏகாதசியன்று முழுமையாக விரமிருந்தவர்கள் இழந்தைகளை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
பாண்டவர்களுள் ஒருவனாக விளங்கிய பீமன், சாப்பாட்டில் பிரியம் கொண்டவன். அவன் தனக்கு அருள் கிடைக்க வேண்டி ஏகாதசி விரதமிருக்க முடிவெடுத்தான். ஆனால், அவனால் பட்டினியாக இருக்க முடியவில்லை. எனவே, தனக்கு குருவாக விளங்கும் வியாச பகவானிடம் இதைப்பற்றி எடுத்துரைத்தான்.

ஒரே ஒரு ஏகாதசியில் மட்டும் நான் முழுமையாக உபவாசம் இருக்கிறேன். ஆனால் எனக்கு எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்க வேண்டுமென்று சொன்னான். அதற்கு வியாச முனிவர் ‘ஆனி மாதம் சுக்ல படச ஏகாதசியன்று விரதமிருந்தால், உனக்கு முழுமையான பலன் கிடைக்கும்’ என்று அருள்புரிந்தார்.

அன்று முதல் ஆனிமாத ஏகாதசி ‘பீம ஏகாதசி’ என்று அழைக்கப்பெற்றது. அந்த ஏகாதசியன்று முழுமையாக விரமிருந்தவர்கள் இழந்தைகளை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

Similar News